Don't Miss!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
புஸு... புஸு... பாம்பைத் துரத்தும் சீரியல் இயக்குநர்கள்!
சென்னை: வெள்ளித்திரையில் பேய் பிடித்து ஆட்டுகிறது என்றால், சின்னத்திரையில் பாம்பு துரத்தித் துரத்திக் கொட்டுகிறது.
சமீபகாலமாக சீரியல்களில் பாம்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் புதுப்புது பாம்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர் இயக்குநர்களும்.
நாகராணி...
ஜீ தமிழில் தினமும் மாலை நாகராணி என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. நாக கன்னியைப் பற்றிய கதை இது.
கேளடி கண்மணி...
இதேபோல், சன் டிவியில் மாலையில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியல் முதலில், நல்ல குடும்பக் கதையாகத் தான் சென்று கொண்டிருந்தது. பின்னர், அதில் திடீரென நாகம் ஒன்று புகுந்தது.
நாகத்தின் பாதையில்...
தற்போது அந்த நாகத்தை வைத்தே அந்த சீரியலின் காட்சிகள் நகர்ந்து வருகின்றன. எப்படியோ தொடங்கிய சீரியல், தற்போது எப்படியோ வேறு பாதையில் பயணித்து வருகிறது.
நாகினி...
இந்த சூழ்நிலையில், சன் டிவியில் புதிதாக நாகினி என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவும் நாகக்கன்னி பற்றிய கதைதான்.