twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆளே மாறிப் போன ஷாரிக்: ஒரு வேளை ஐஸ்வர்யாவின் 'அந்த' விஷயம் தெரிந்துவிட்டதோ?

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள ஷாரிக் ஆளே மாறிப் போயுள்ளார்.

    ராணி மகாராணி டாஸ்கின்போது ஐஸ்வர்யா கோப்பட்டு ஓவராக ஆடினார். தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். அந்த டாஸ்க் முடிந்தும் கூட அவர் அதே ஃபீலிங்கில் தான் இன்று வரை உள்ளார்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நித்யா ஐஸ்வர்யாவை கண்டித்துள்ளார்.

    ரித்விகா

    ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது அவரை தடுக்காத ஹவுஸ்மேட்ஸ் மீது தான் அதிகமாக கோபம் உள்ளது என்றார் நித்யா. இதையடுத்து ஐஸ்வர்யாவை தட்டிக் கேட்டிருக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார் ரித்விகா. பெரும்பாலான டாஸ்குகளின்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்ததற்காக விமர்சனத்திற்குள்ளானவர் ரித்விகா.

    ரொம்ப லேட்

    ரொம்ப லேட்

    பிக் பாஸ் 2 நிகழ்ச்சியே முடியப் போகிறது. இனிமேல் நீங்க ஐஸ்ர்யாவை தட்டிக் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன?. அது தான், எல்லாம் நடந்து முடிந்துவிட்டதே. நீங்கள் வழக்கம் போன்று ஒரு ஓரமாக உட்கார்ந்து மிக்சர் சாப்பிடுங்க ரித்விகா என்று பார்வையாளர்கள் அவரை கலாய்த்துள்ளனர்.

    மாற்றம்

    மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஷாரிக்கை பார்த்ததும் ஐஸ்வர்யா வெட்கப்பட்டார். அந்த கருமத்தை மட்டும் படாதம்மா பார்க்க முடியவில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள். ஐஸ்வர்யாவை பார்த்த ஷாரிக் அந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையவில்லை. ஒரு வேளை கோபி விஷயம் ஷாரிக்கிற்கு தெரிந்துவிட்டதோ?

    சோறு

    சோறு

    ஷாரிக் ஐஸ்வர்யாவை கண்டுகொள்ளவே இல்லை. சோறு கிடைத்தால் போதும் என்பது போன்று அவர் பாட்டுக்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஐஸ்வர்யாவோ தனக்கு மிகவும் முக்கியமானவர் யாஷிகா தான் என்று கூறி சமாளித்துள்ளார். யாஷிகா அருகில் செல்லக் கூடாது என்று பிக் பாஸ் சொல்லியிருப்பாரோ?

    English summary
    Looks like former Bigg Boss 2 Tamil contestant Shariq is no longer interested in Aishwarya.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X