டேய் முகெனு.. வேணாம்டா.. அபிராமி திட்டும்டா.. அதகளப்படுத்தும் ஷெரின் அம்மா! அதிர்ந்த பிக்பாஸ் வீடு!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ள ஷெரினின் அம்மா ஹவுஸ்மேட்ஸ்களை கலாய்த்து அதிர வைத்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று மூன்று குடும்பத்தினர் வருகை தந்தனர். அதாவது தர்ஷன் குடும்பத்தினர், சேரன் குடும்பத்தினர் மற்றும் வனிதாவின் மகள்கள் ஆகியோர் வந்து சென்றனர்.
இந்நிலையில் இன்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் மூன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துள்ளனர். காலையில் இருந்து ஒளிபரப்பான இரண்டு புரமோக்களில், முதலில் கவினின் நண்பர் வந்தார்.

முன்றாவது புரமோ
அவரை தொடர்ந்து சாண்டியின் மனைவியும் மகளும் வந்தனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

ஷெரின் அம்மா
அதில் ஷெரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். ஷெரினின் அம்மாவும், அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றொருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

லாஸ்லியாவுக்கு அட்வைஸ்
தனது மகளை ஆரத்தழுவிய ஷெரினின் தாயார் உச்சி முகர்ந்து முத்தமிட்டார். பின்னர் லாஸ்லியாவிடம் ஹேப்பியா இரு, எல்லாமே நல்லதா நடக்கும் என அறிவுரை கூறுகிறார்.

செல்ல சண்டை
தொடர்ந்து சாண்டியிடம் செல்லும் அவர், நீ ஷெரினுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்கிறாய், நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என செல்ல சண்டை போடுகிறார். அப்போது முகென், அவருடன் வந்த மற்றொருவரை கையப்பிடித்து அழைத்து உள்ளே செல்கிறார்.

அபிராமி திட்டும்டா
அதனை பார்த்த ஷெரினின் அம்மா, டேய் முகெனு வேண்டாம்டா, அபிராமி திட்டும்டா என்று கூறுகிறார். அப்போது மொத்த ஹவுஸ்மேட்ஸும் ஓவென கூச்சலிடுகின்றனர்.

வித்தியாசமான எவில்
இதைத்தொடர்ந்து பேசும் ஷெரின் நான்தான் சொன்னேனே, என்னுடைய அம்மா ஒரு வித்தியாசமான எவில் என்று என கூறுகிறார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்த அபிராமி, முகென் மீது ரொம்பவே பொஸஸ்ஸிவாக இருந்தார்.

அதகளம்
அந்த காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன. அவற்றையெல்லாம் பார்த்த ஷெரினின் தாயார், இன்று பிக்பாஸ் வீட்டை கிண்டலும் கேலியுமாக அதகளப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











