Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'டி 20' சூப்பர் சிங்கரில் பட்டையை கிளப்பிய பாட்டிகளின் நடனம்
நடனம் என்பது உற்சாகத்தை தரக்கூடிய விசயம். நடனத்தை முழுமையாக கற்றுக்கொண்டு முறைப்படி ஆடுவது ஒருவகை. இசையை கேட்டு தானாக தாளம் மாறாமல் ஆடுவது மற்றொருவகை. குழந்தைகள் எப்படி நடனமாடினாலும் அதை ரசிக்கலாம். அதேபோல் வயதான தாத்தாவோ, பாட்டியோ நடனமாடுவது கூட அபூர்வமானதுதான்.
விஜய் டிவியின் டி 20 சூப்பர் சிங்கர் நடனநிகழ்ச்சியில் நேற்று பச்சை அணியும், மஞ்சள் அணியும் மோதின. இதில் பச்சை அணியைச் சேர்ந்த இருவர் வல்லவன் படத்தில் வரும் "யம்மாடி ஆத்தாடி" என்ற பாடலை பாடினார்கள். இசையும், பாடலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தவே நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த இரண்டு பாட்டிகள் நடனமாட ஆரம்பித்துவிட்டனர்.
வரிக்கு வரி அவர்கள் மாற்றிய ஸ்டெப் அனைவரையும் ரசிக்க வைத்தது. கடைசியில் பாடலுக்கு மதிப்பெண் போட்ட நடுவர் கிரிஷ் பாட்டியின் நடனத்திற்காக ஒருமதிப்பெண் அதிகம் கொடுத்தார். அது மட்டுமல்லாது பாட்டிகளை மேடைக்கு அழைத்து அவர்களுடன் ஒரு குத்தாட்டம் போட்டார். நேற்றைய 'டி 20 சூப்பர் சிங்கர்' இசை நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது