Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சின்னத்திரையில் சித்த வைத்தியர்கள்!
வின் டிவியில் ஆரம்பத்தில் இருந்தே சித்த மருத்துவர் ஒருவர் நிகழ்ச்சி வழங்கி வருகிறார். அவருடைய வேலையே காலையில் பேச ஆரம்பித்தால் தாத்தா காலத்தில் இருந்து இந்த சிகிச்சை செய்வதை பக்கம் பக்கமாக செய்வார்.
ஆண்மை குறைபாட்டில் ஆரம்பித்து சித்த மருத்துவ வயாக்கரா வரை சொல்லிவிட்டுதான் நிறுத்துவார்.
அதேபோல் ஜெயா ப்ளஸ், வசந்த் டிவிகளில் ஒரு டாக்டர் குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு பற்றி கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார். அதற்கு ஒரு தொகுப்பாளர் வேறு. ஜெயா டிவியில் இன்றைக்கு காலையில் சோரியாசிஸ் நோய்க்கு அழகான தொகுப்பாளினி கேள்வி கேட்க அதற்கு மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.
இவர்கள் டிவியில் காசு செலவழித்து தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள காரணமே இந்த டிவி புகழ், அந்த டிவி புகழ் என்று தங்கள் பெயருக்கு முன்னாள் போட்டுக்கொள்ளத்தான். இந்த மருத்துவர்கள் காசு கொடுத்துதான் டிவியில் பேசுகிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும்?. அப்புறம் இந்த நாளில் இந்த ஊரில் குறிப்பிட்ட லாட்ஜில் இருப்போம் அங்கு வந்து பாருங்கள் என்று கூறிவிட்டு ஏமாந்தவர்களிடம் முடிந்த வரை காசை கறப்பதும் ஒரு கலையாகிவிட்டது.
இப்படித்தான் சென்னையில் மான்கறி வைத்தியம் செய்கிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் ஏமாற்றிய சித்த வைத்தியர் ஒருவர் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
நேயர்கள் இனியாவது இதுபோன்ற வைத்தியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.