Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2021 ஆம் ஆண்டை ஜில்லாக்கும் புதிய நெடுந்தொடர்… “சில்லுனு ஒரு காதல்” கலர்ஸ் தமிழில் !
சென்னை : ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த நெடுந்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, சில்லுனு ஒரு காதல் என்ற புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சியை அதன் பார்வையாளர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்விக்க தயாராக இருக்கிறது கலர்ஸ் தமிழ்
ஜனவரி, 4 ஆம் தேதியன்று தனது முதல் ஒளிபரப்பை தொடங்கும் இந்த பிரைம் டைம் நிகழ்ச்சியானது, ஒரு புதுயுக காதல் கதையாகும். ஒரு இளம், நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிக்கும் மற்றும் ஒரு துடிப்பான டீன் ஏஜ் வயது பெண்ணிற்கும் இடையே நிகழும் தினசரி சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை அழகாக இது சித்தரிக்கிறது.
ஆடையேதும் அணியாமல்.. 2020க்கு பிரபல நடிகை எப்படி குட்பை சொல்றாங்க பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ!
பரபரப்பான ஒரு சிறிய நகரம் சூழலின் பின்னணியைக் கொண்ட சில்லுனு ஒரு காதல் என்ற இந்த நெடுந்தொடர், உயிரோட்டமுள்ள உணர்ச்சிகளும், மென்மையான உணர்வுகளும் நிறைந்ததாக ஆர்வமூட்டும் கதைக்களத்தைக் கொண்டு பயணிக்கிறது.
ஐபிஎஸ் அதிகாரி சூர்யகுமார்
இதன் இரு முக்கிய கதாபாத்திரங்களான நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி சூர்யகுமார் மற்றும் குறும்பும், கேளிக்கையையும் விரும்புகின்ற இளம் பெண்ணான கயல்விழி ஆகியோரின் கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்படும் கதையான இந்நிகழ்ச்சி, இந்த நவீன யுகத்தில் காணப்படும் உறவுகளின் ஒரு புதிய பரிமாணத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.
கிளர்ச்சியும், கொந்தளிப்பும் நிறைந்த
முதன்முறையாக பார்த்த உடனேயே சூர்யகுமாருடன் காதலில் விழும் கயல்விழி, அதன்பிறகு அவரோடு தொடர்ந்து இருப்பதற்காக தளராத விடாமுயற்சியையும், தேடலையும் மேற்கொள்கிறாள். தனது தீவிர முயற்சியில் வெற்றி காணும் கயல்விழியை சூர்யகுமார் திருமணம் செய்கிறார். குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் இந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை கிளர்ச்சியும், கொந்தளிப்பும் நிறைந்த திருமண வாழ்க்கையாக அமைகிறது.
அனூப் சந்திரசேகரன்
கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரசேகரன் பேசுகையில், இந்த காலஅளவில் எமது பார்வையாளர்கள் மத்தியில் மென்மையான காதல் மற்றும் ரொமான்ஸ் என்ற பிரிவில் வெளிவரும் நிகழ்ச்சிகள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றனர். ஒரு வித்தியாசமான கதையை உயிரோட்டமுள்ளதாக கொண்டு வருவதற்காக இந்த நெடுந்தொடரின் நடிகர்களும் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளும் ஓய்வு ஒழிச்சலின்றி கடுமையாக உழைத்திருக்கின்றனர். இந்த நெடுந்தொடரின் நேர்த்தியான சித்தரிப்பு, பார்வையாளர்களை, கதையோடு ஒன்றிணையுமாறு, மெய்மறக்கச் செய்யுமாறு மற்றும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்பது நிச்சயம்," என்று கூறினார்.
சமீர் அஹமது
ஐபிஎஸ் சூர்ய குமாராக நடிக்கும் நடிகர் சமீர் அஹமது இது பற்றி பேசுகையில், "சில்லுனு ஒரு காதல் என்ற நெடுந்தொடர் மூலம் கலர்ஸ் தமிழ் அலைவரிசையோடு இணைந்திருப்பது எனக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது. எனது அறிமுக நிகழ்ச்சியிலேயே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பது ஒரு தனிச்சிறப்பான அனுபவமாகும். இந்த நெடுந்தொடரின் கதையும் மற்றும் நிகழ்வுகளும் மனமதை ஈர்ப்பதாக இருக்கிறது. ஒரு சிக்கலான காதல் கதையில் ஒரு புதிய பரிமாணத்தை இது அழகாக சித்தரிக்கிறது. இதன் தொடக்க நிகழ்விலிருந்தே பார்வையாளர்களால் இந்த நிகழ்ச்சி பெரிதும் வரவேற்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறினார்.
ஆர்வப்பெருக்கில்
கயல்விழி என்ற இளம் பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் தர்ஷினி, அவரது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், "கலர்ஸ் தமிழ் குடும்பத்தின் ஒரு அங்கமாக இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சில்லுனு ஒரு காதல் நெடுந்தொடரில் கயல்விழி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது ஒரு புத்துணர்வூட்டும் அனுபவமாகும். அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் குணாதிசியங்களை உருவகப்படுத்துவதாக எனது கதாபாத்திரம் அமைந்திருப்பதால் பார்வையாளர்கள் அனைவருமே உடனடியாக அந்த கதாபாத்திரத்தோடு தங்களை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள இயலும். எதிர்பாராத திருப்பங்களையும் மற்றும் நிகழ்வுகளையும் இந்த கதை கொண்டிருப்பதால் அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற ஆர்வப்பெருக்கில் இருக்கையின் முனைகளுக்கே பார்வையாளர்களை இது கொண்டு வரும் என்பது நிச்சயம்." என்று கூறினார்.
அங்கிகாரம் கொடுக்க
2021 ஜனவரி 4 அன்று தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு பலர் மனதில் இடம் பிடிக்கப்போகின்ற சில்லுனு ஒரு காதல் நெடுந்தொடரைக் காண, கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுமாறு இந்த குழு ஒரு பக்கம் ப்ரமோஷன் செய்கின்றனர் . மக்கள் மனதில் பல விதமான சீரியல்கள் ஓடி கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கண்டிப்பாக புதிய கதைகளையும் நல்ல திரைக்கதை கொண்ட காட்சிகளை அங்கிகாரம் கொடுக்க தவறுவது இல்லை . பொறுத்து இருந்து பார்ப்போம் -சில்லுனு ஒரு காதல் பல காதல் காவியங்களை சீரியல் மூலம் உருவாக்கும் என்ற நம்பிக்கையில்.