பாம்பு நடிகைக்கும் பேய் நடிகைக்கும் நிஜமாவே சண்டையாமே?
சூரிய டிவியில் பாம்பு சீரியரில் நடிக்கும் இரண்டு நடிகைகளுக்கும் நிஜமாகவே சண்டை வந்து விட்டதால் தயாரிப்பாளர் தலைவலியில் தவிக்கிறார்.
Recommended Video

சென்னை: சூரிய சேனலில் பாம்புக்கும் பேய்க்கும் இடையே சண்டை மூட்டிவிட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் நிஜமாகவே தலைவலியில் தவிக்கிறார்களாம்.
இவர்களுடைய சண்டயால் எங்கே நிஜமாவே இருவரும் செட்ல் மோதிக்கொள்வார்களா என்ற சூழல் நிலவுகிறதாம்.
ஏற்கனவே கதை என்னுடையது என்று உதவி இயக்குநர் கோர்ட் படியேறினார். இதனால் கதையின் கருவையே மாற்றி விட்டார்கள்.

பேய்க்கு டபுள் ஆக்ட்
கதாபாத்திரத்தில் கனமில்லை என்று பேய் நடிகை தயாரிப்பாளரிடம் கண்ணை கசக்க இப்போது பேய் நடிகைக்கு உருவம் கொடுத்து இரண்டு வேடமாக்கி விட்டார்கள்.

கடுப்பான பாம்பு
பாம்பு நடிகைக்கு ஹீரோவுடன் திருமணம் நடந்தாலும், இப்போது புதிதாக பேய் நடிகைக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தால் கடுப்பாகியிருக்கிறாராம்.

நல்ல வேடிக்கை
பாம்புக்கும் பேய்க்கும் இடையேயான சண்டை போய் இப்போது நிஜமாகவே இருவரும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்களாம். பேய் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாம்புக்கு பிடிக்கவில்லையாம்.

கண்ணை கசக்கும் பாம்பு
கதையின் கரு முதலில் என்னை சுற்றி வந்தது. இப்போது அவளை சுற்றியே வருகிறதே என்று பாம்பு நடிகை கேட்கத் தொடங்கி விட்டாராம். இதனால் பேய் நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைக்கலாமா என்று யோகிக்கிறாராம் இயக்குநர்.
எங்க போய் முடியப் போகுதோடோ


Click it and Unblock the Notifications











