Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரே வீட்டுக்குள் வசித்தும் பேசாத தம்பதியர்…. பேச வைத்த நிர்மலா பெரியசாமி!
இதைக் கேட்ட நிர்மலா பெரியசாமி, புகார் சொன்ன கணவரிடம் ஃப்ளாஸ்பேக் கேட்டார். தங்களுடையது காதல் திருமணம் என்றும், தனக்கும் தன் மனைவிக்கும் 13 வயது வித்தியசம் என்றும் கூறினார். தன்னுடைய மனைவி தனக்கு அத்தை மகள் முறை வேண்டும் என்பதால் 10 வகுப்பு பரிட்சை எழுதி முடித்த உடனே பள்ளிக்குச் சென்று தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறி அதிரவைத்தார்.
தன் மீது விழுந்த கொலைப்பழியினால் திருமணமான சிறிதுநாட்களிலேயே சிறைக்கு சென்றுவிட்டேன் என்று கூறிய அவர், சிறையில் இருந்தவாரே தன்னுடைய மனைவியை பி.ஏ. பிஎல் படிக்க வைத்துள்ளார்.
7 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையில் இருந்து விடுதலையாகி மனைவியுடன் சந்தோசமாக சேர்ந்து வாழத் தொடங்கினோம் என்று கூறிய அவர், தான் சிகரெட் குடிப்பது தன் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் தினசரி சண்டை வருகிறது. இப்போது இருவரும் பேசி எட்டு மாதங்கள் ஆகிறது என்றும் நிர்மலா பெரியசாமியிடம் கூறினார்.
உடனே மனைவியை அழைத்த நிர்மலா பெரியசாமி, கணவரிடம் ஏன் பேசுவதில்லை என்று கேட்டார். குழந்தை இருப்பதால் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவர் கேட்கவில்லை. குடித்துவிட்டு வந்து திட்டுகிறார். அவர்தான் தன்னுடன் பேசுவதில்லை என்று கூறினார் மனைவி பாலாமணி.
இதன்பின்னர் இருவரையும் சமாதானம் செய்துவைத்து பேசவைத்தார் நிர்மலா பெரியசாமி. ஒரே வீட்டிற்குள் இருந்தும் 8 மாதங்கள் பேசாமல் இருந்துவிட்டு டிவி நிகழ்ச்சியின் மூலம் சந்தோசமாக பேசினர் தம்பதியர்.
கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற நிலையிலும் கணவன் நிச்சயம் திரும்பி வருவான் என்று காத்திருந்து வக்கீலுக்கும் படித்து முடித்துள்ளார் அந்தப் பெண். இனிமேல் நான் சிகரெட் குடிக்கமாட்டேன். மது அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்ததோடு தன் அம்மாவிற்கு ஒரு வீடும், தன் மனைவிக்கு ஒரு வீடும் கட்டப் போவதாக கூறினார்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரலாற்றிலேயே கணவன் மனைவி பஞ்சாயத்து என்று வந்து யாரும், யாரையும் திட்டாமல், அடிக்காமல், அழுகையின்றி சந்தோசமாக முடிந்தது நேற்றைய நிகழ்ச்சிதான் என்று கூறவேண்டும்.