Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தோனேசியாவில் கலைஞர் டிவியின் “சூரிய புத்ரி'' குழு
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் சூரிய புத்ரி'' என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. இதுவும் கள்ளக்காதல் கண்றாவி கதைதான். இருந்தாலும் அதையே பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
வைஷ்ணவி மீடியோ ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் நடிகை குட்டிபத்மினி இந்த தொடரை தயாரித்துள்ளார். கிரியேட்டிவ் ஹெட் என்பதோடு பாரதி' என்ற முக்கிய பாத்திரத்திலும் அவர் நடித்து வருகிறார்.
பாரதியின் ( குட்டிபத்மினி) கணவனான ராம், தான் காதலித்த பெண் ஸ்ரீமதியுடனும் திரை மறைவு வாழ்க்கை நடத்தி வருகிறான். ஒரு கட்டத்தில் ராமிடம் சமூக அங்கீகாரம் கேட்டு ஸ்ரீமதி நச்சரிக்க, ராம் அவளைக் கொன்று மலையிலிருந்து உருட்டி விடுகிறான். இதற்கிடையில், ராம்-பாரதி குடும்பத்தை அழிக்க முயற்சி எடுக்கும் கிருஷ்ணாவின் தொல்லை ஒருபுறம்... இவர்களின் இரண்டாவது மகன் ராஜேஷின் காதல் பிரச்சினை இன்னொரு புறம் என பிரச்சினைகளாக தொடர்கின்றன.
இவை ஓரளவிற்கு முடிவுக்கு வரவே பாரதி-ராம் இருவரும் மன நிம்மதிக்காக வெளிநாடு செல்கின்றனர். ஆனால் தான் கொலை செய்து விட்டதாக நினைக்கும் ஸ்ரீமதியை ராம் அங்கே பார்க்கிறான். அங்கு வேறு கெட்-அப்பில் வந்து மிரட்டும் ஸ்ரீமதியை பார்த்து ராம் குழம்புகிறான். இனிவரும் எபிஷோடுகள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் வரும் காட்சிகளுக்காக படப்பிடிப்புக்குழுவினர் இந்தோனேஷியா போயிருக்கிறார்களாம். வெளிநாடு போயும் கள்ளக்காதல் கதைதான் எடுப்பேன் என்று வீம்பாக இருப்பவர்களை என்னவென்று சொல்வது?
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!