Don't Miss!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிராத்தனை
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சார்தாம் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பூஜை நடைபெற்றது.
சங்கரா டிவி, சங்கரா பவுண்டேஷன் சார்பில் உத்தர்கண்ட் வெள்ளத்தில் உயிர்நீத்தவர்களின்ஆன்ம சாந்திக்கும், அங்கு பரிதவிக்கும் மக்களின் நலனுக்காகவும், அங்கு நிவாரணபணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களின்நலனுக்காகவும், அடையாறு அனந்த பத்மநாபஸ்வாமி கோவிலில், ஜூலை 7 ஆம்தேதி அன்று, பல வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத ஒரு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இப்பூஜையில், மோட்ச தீபம் ஏற்றி, வேத விற்பன்னர்களின் வழிகாட்டுதலின்படி சிவ ஸஹஸ்ரநாமாவளிக்கு கோடி வில்வ அர்ச்சனையும், விஷ்ணு சஹஸ்ரநாமாவளிக்கு கோடி துளசி அர்ச்சனையும்செய்து பக்தர்கள்பிரார்த்தனை செய்தனர்.
இப்பூஜையில் கலந்து கொண்டவர்கள்சமூக நலனுக்குகாகவும், ஆன்மீக எழுச்சிக்காகவும் செயலாற்றும் ஸ்ரீ சங்கரா டிவியின் செயல்பாட்டினை மனதார பாராட்டினர். இந்நிகழ்ச்சியை சங்கரா டிவி தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ் குமார் பொறுப்பேற்று நடத்தினார் .