twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிராத்தனை

    By Mayura Akilan
    |

    உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சார்தாம் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பூஜை நடைபெற்றது.

    சங்கரா டிவி, சங்கரா பவுண்டேஷன் சார்பில் உத்தர்கண்ட் வெள்ளத்தில் உயிர்நீத்தவர்களின்ஆன்ம சாந்திக்கும், அங்கு பரிதவிக்கும் மக்களின் நலனுக்காகவும், அங்கு நிவாரணபணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களின்நலனுக்காகவும், அடையாறு அனந்த பத்மநாபஸ்வாமி கோவிலில், ஜூலை 7 ஆம்தேதி அன்று, பல வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத ஒரு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    Sri Sankara Foundation conducted a SAMOOHIKA PRATHANA

    இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இப்பூஜையில், மோட்ச தீபம் ஏற்றி, வேத விற்பன்னர்களின் வழிகாட்டுதலின்படி சிவ ஸஹஸ்ரநாமாவளிக்கு கோடி வில்வ அர்ச்சனையும், விஷ்ணு சஹஸ்ரநாமாவளிக்கு கோடி துளசி அர்ச்சனையும்செய்து பக்தர்கள்பிரார்த்தனை செய்தனர்.

    இப்பூஜையில் கலந்து கொண்டவர்கள்சமூக நலனுக்குகாகவும், ஆன்மீக எழுச்சிக்காகவும் செயலாற்றும் ஸ்ரீ சங்கரா டிவியின் செயல்பாட்டினை மனதார பாராட்டினர். இந்நிகழ்ச்சியை சங்கரா டிவி தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ் குமார் பொறுப்பேற்று நடத்தினார் .

    English summary
    Sri Sankara TV,in association with Sri Sankara Foundation conducted a SAMOOHIKA PRATHANA for peace to the departed souls – animals & human beings and for the welfare of the people at Utharkand and for our army personnel, on Sunday, July 07, 2013 at Kanchi Mahaswamy Anantha Mandapam, at Anantha Padmanaba Swamy Temple at Adayar in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X