Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மனசெல்லாம் ஊர்லதாங்க்கா இருக்கு.. சுஹாசினியிடம் நெகிழ்ந்த கஞ்சா கருப்பு!
செவ்வாய்கிழமை இரவு நடிகர் கஞ்சா கருப்புடன் உரையாடினார் சுகாசினி. நகைச்சுவை நடிகர் என்று மட்டுமே அறியப்பட்டிருந்த கருப்பு சிறந்த மனிதாபிமானி என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அவரது உதவும் குணம் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.
கிராமத்தில் இருந்து வந்த தன்னை தமிழ்நாட்டுக்கே அடையாளம் காட்டிய இயக்குநர்கள் பாலா மற்றும் அமீரின் பெயரை தான் கட்டிய வீட்டிற்கு சூட்டியுள்ளதாக பேட்டியின் போது தெரிவித்தார் ஏற்றிவிட்ட ஏணிப்படியை எட்டி உதைக்கும் இந்த காலத்தில் அவரது செயல் வியப்பை ஏற்படுத்தியது.
சுஹாசினியிடம் பேசும்போது இன்னும் நான் ஊர்லதாங்க்கா இருக்கேன். உடம்பு மட்டும்தான் சென்னையில இருக்கு என்று தனது ஊர்ப்பாசத்தை கஞ்சா கருப்பு வெளிப்படுத்தியபோது சென்னையில் வசித்து வரும் வெளியூர்க்காரர்களின் உணர்வுகளைத் தொடுவதாக இருந்தது.
எளிமையும், பழையதை மறக்காத இந்த குணமும் கஞ்சா கருப்புவை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றால் மிகையாகாது.