Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'மாடர்ன்' டிரஸ்ஸுக்கு மாறிய சன் நியூஸ் ரீடர்கள்!
ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் விதம் விதமான மேக்கப்புடன், விதம் விதமான உடைகளில் கண்ணைக் கவரும் வகையில் செய்தி வாசிப்பாளர்களைக் காணலாம். இருப்பினும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பெரும்பாலும் தெய்வீகத் தேவதைகளாக காட்சி தந்து வந்தனர்.
தமிழக மக்களுக்கு மாடர்ன் கலாச்சாரம் பொருந்தாது என்பதாலும், நம் பெண்களுக்கு அழகே புடவைதான் என்பதாலும், புடவையில் வரும்போதுதான் கம்பீரமும், கண்ணியமும் தூக்கலாக தெரியும் என்பதாலும் புடவையிலேயே வநது செய்தி வாசித்து வந்தனர் தமிழ் சேனல்களின் பெண் செய்தி வாசி்ப்பாளர்கள்.
இருப்பினும் விஜய் டிவி முன்பு இந்த பாரம்பரியத்தை உடைத்தது. சமீபத்தில் புதிய தலைமுறை புதிய கோணத்தில் தனது பெண் செய்தி வாசிப்பாளர்களை காட்ட ஆரம்பித்தது.
இந்த நிலையில் நீண்ட காலமாக புடவையிலேயே செய்தி வாசித்து வந்த சன் டிவியிலும் இப்போது ஒரு புது மாற்றம். சன் நியூஸ் சானலில் கடந்த சில நாட்களாக பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை புடவையில் பார்தது வந்த பெண் செய்தி வாசிப்பாளர்கள இப்போது மாடர்ன் டிரஸ்ஸில் பார்ப்பது நேயர்களுக்கு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது.
சேலையை மாற்றிய கையோடு இன்னொன்றையும் செய்தி வாசிப்பாளர்கள் மாற்றினால் நன்றாக இருக்குமே என்பது நேயர்களின் கோரிக்கை - அதாவது செய்திவாசிப்பாளர்களின் உச்சரிப்பும், செய்தியை கூறும்போது மாறும் முகபாவமும் அவசியம். புடவையோ, நாகரீக உடையோ செய்திவாசிப்பாளர்களின் முக பாவம் முக்கியம். எந்த செய்தியானாலும் ஒரே சோக கீதம் பாடுகின்றனர் செய்திவாசிப்பாளர்கள். அதையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது அப்பொழுதுதான் சேனலை மாற்றாமல் செய்தியை கொஞ்சம் கேட்பார்கள் என்கின்றனர் நேயர்கள்.
நேயர் விருப்பத்தை நிறைவேற்றப் பாருங்கப்பா...