ஜனனிக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. அதிர்ச்சியில் சக்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில், ஜனனி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதையடுத்து, ஜனனி, சக்தியிடம் எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் ஏதோ ஒரு பயமாக, பதற்றமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது என்னவென்று எனக்கு சொல்ல தோன்றவில்லை சக்தி, நம்ம குழந்தை நல்லபடியாக பிறக்குமா? என கேட்கிறாள். உடனே சக்தி, எதற்காக இப்படி நெகட்டிவ்வாக பேசுகிற ஜனனி, எப்பொழுதுமே நீ பாசிட்டிவாக பேசக்கூடியவள். இனிமேலும் நீ அப்படித்தான் எல்லா விஷயங்களிலும் பாசிட்டிவாக பேச வேண்டும். இனிமேல் எதைபற்றியும், நீ குழப்பமோ, பயமோ படக்கூடாது என ஜனனிக்கு ஆறுதல் சொல்கிறார் சக்தி.

கோபப்பட்ட மதிவதனி: இதையடுத்து சத்யா, குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என இவருடைய அப்பா தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குழந்தையை கடத்தி விடுவாரோ என்று பயமே வந்துவிட்டது. அதனால் தான் நேரடியாக, இங்கு அழைத்து வந்தேன் என சொல்கிறாள். இதைக்கேட்டு கோபப்படும் மதிவதனி, தன்னுடைய கணவருக்கு ஃபோன் செய்து இப்பொழுதுதான் குழந்தையை பற்றி உனக்கு நினைவு வருதா, இவ என்னுடைய குழந்தை, இதுக்கு மேல் ஏதாவது பிரச்சனை செய்தால், பார்ப்பதை கூட தவிர்த்து விடுவேன் என சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறாள்.
நடக்கப்போவது என்ன: மறுபக்கம் சக்தி ஜனனியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கு ஜனனியை பரிசோதிக்கும் மருத்துவர், குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால், ஜனனி மிகவும் வீக்காக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவரின் கர்ப்பப்பை மிகவும் வீக்காக இருக்கிறது. அதற்காக பயப்பட வேண்டாம்.ஆனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











