உனக்கும் அவனுக்கும் ஒன்னும் நடக்கலையா? தர்ஷனை அடைய நினைக்கும் அன்புக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன் வீட்டில் ஜனனி டீம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஜனனி இன்னும் இரண்டு நாளில் அந்த வீடியோ, நம் கைக்கு வந்துவிடும் அதன் பிறகு அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதை கரிகாலன் ஒட்டு கேட்டுவிட்டு, அப்போ உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லையா.. 15 நாளில் தான், அனைத்து ஆதாரங்களையும் கண்டுபிடிக்க போகிறீர்களா.. இதை நான் இப்பொழுதே மாமாவிடம் சொல்கிறேன் என ஓடுகிறான்.
கரிகாலனை அனைவரும் துரத்திச் செல்ல அவன் படிக்கட்டில் சரிக்கி விழுந்து மண்டையில் அடிபட்டு மயங்கி விடுகிறான். பின் எழுந்திருக்கும் கரிகாலன் சுயநினைவை இழந்தது போல ஆதிரை ஆதிரை என சொல்லி நாடமாடுகிறான். அவன் நாடகமாடுவது தெரியாமல் அனைவரும் உண்மையிலேயே எல்லாத்தையும் மறந்துவிட்டான் என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், ஜனனி அனைவரிடமும் பேசிக்கொண்டு இருக்கிறாள். அப்போது தர்ஷினி, சக்தி சித்தப்பாக்கு ஏதாவது விசயம் தெரிந்ததா? என கேட்கிறாள் உடனே ஜனனி அங்கு மழையாக இருப்பதால் எதையும் விசாரிக்க முடியவில்லையாம், இன்னும் இரண்டு நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார் என ஜனனி சொல்கிறாள். அப்போது, தர்ஷனி, சக்தி சித்தப்பாவை பத்திரமாக இருக்கச் சொல்லுங்க, என்னுடைய அப்பா எதை வேண்டுமானாலும் செய்வார் என சொல்கிறாள். இவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்க நந்தினிக்கு திடீரென இருமல் வந்ததால் தண்ணீர் எடுப்பதற்காக பார்கவி கீழே வருகிறாள்.
எதுவுமே நடக்கலையா: பார்கவியை பார்த்த அன்புக்கரசி, சமையல் அறைக்கு சென்று, உனக்கும் தர்ஷனுக்கும் இன்னும் எதுவுமே நடக்கவில்லையா? அதில், நான் உன்னை விட மூத்தவளாக இருக்கிறேன். எந்த சந்தேகம் என்றாலும் என்னிடம் கேட்டு தெரிந்து கொள். தர்ஷனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று எனக்குத்தான் நன்றாக தெரியும் என சொல்ல ஆத்திரப்படும் பார்கவி, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா,என்று கத்துகிறாள்.பார்கவி கத்தும் சத்தம் கேட்டு அங்கிருந்து ஓடி வருகிறார் தர்ஷன். அப்போது, அங்கு வரும் ஜனனி, பார்கவியை சமாதானப்டுத்தி, அன்புக்கரசியை இந்த வீட்டில் வைத்து இருக்க காரணமே, உங்களுக்குள் சண்டை வர வேண்டும் என்பதற்காகத்தான்.
அன்புக்கரசியின் திட்டம்: இதனால், நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசினால் அனைத்தும் சரியாகிவிடும். இருவரும் பெங்களூர் சென்றுவிட்டு வாருங்கள் என சொல்கிறாள். அப்போது, தர்ஷன், அம்மா இப்படி இருக்கும் போது நான் வெளியில் சென்றால் நன்றாக இருக்காது, வேண்டாம் என்கிறான். ஆனால், பார்கவி, இல்ல தர்ஷா நாம ஊருக்கு போகலாம் என சொல்கிறாள். இதை கரிகாலன் கேட்டுவிட்டு அன்புக்கரசியிம் சொல்கிறான்


Click it and Unblock the Notifications











