திறப்பு விழா நடக்கவே கூடாது.. ராவணனின் பகீர் பின்னணி.. உண்மையைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஜனனி!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய எபிசோடுல ஜனனி வருத்தமா இருப்பதை பார்த்த சக்தி எதுக்காக இப்படியே வருத்தமா இருக்க ஜனனி,எத பத்தியும் கவலைப்படமா நீ நிம்மதியா இரு, அம்மாவும் என் பொண்ணு எது செஞ்சாலும் நல்லதுக்காக தான் செய்வா அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்குனு சொல்லிட்டு தான் போனாங்க என்கிறார்.

உடனே ஜனனி இல்ல சக்தி நான் அம்மாவை பத்தி கவலைப்படல, எனக்கு இந்த ராவணனை பத்தி தான் கவலையா இருக்கு, அவன் யாரு எதற்காக இந்த வீட்டுக்குள்ள வந்து எல்லாரையும் கைக்குள்ள போட்டுக்குறான்னு எனக்கு ஒண்ணுமே புரியல சக்தி, உண்மையிலேயே அவன் இந்த குடும்பத்துக்கு ஏதாவது நல்லது செய்யணும் நினைச்சிருந்தா இப்படி வீட்டுக்குள்ள வந்து உக்காந்துகிட்டு நாட்டாமை பண்ணவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், இவன் வீட்டுக்குள்ள வந்து இருக்கிறத பார்த்தா ஏதோ ஒரு சந்தேகமா இருக்கு எனக்கு என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது சக்தி, எனக்கும் புரியுது ஜனனி, ஆனா வீட்ல இருக்கிற அண்ணனிலிருந்து ஞானம், கதிர், யாருமே அவன பத்தி எதுவுமே தெரியாம அவன் பேச்சைக் கேட்டு ஆடிட்டு இருக்காங்க நம்ம இதுக்கு மேல என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார். மதிவதனி மேடமுகே இந்த ராவணனை பத்தி எதுவுமே தெரியல, ஒரு போலியான சர்டிபிகேட் கொடுத்து அவங்கள அவன் ஏமாத்திருக்கான். அப்படிப்பட்டவனை இந்த குடும்பத்துக்குள் எதுக்கு வந்து இருக்கான். அதை நினைக்கும்போது தான் எனக்கு பயமா இருக்கு, நிச்சயமா இந்த திறப்பு விழாவில் ஏதோ ஒரு பெரிய பிளானை அவன் செய்கிறான் என எனக்கு தோணுது சக்தி.

Also Read
பாத்ரூமில் ஆட்டம்.. அழுது புலம்பினதெல்லாம் இதுக்குத்தானா?.. பரீனாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
பாத்ரூமில் ஆட்டம்.. அழுது புலம்பினதெல்லாம் இதுக்குத்தானா?.. பரீனாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

யார் அந்த ராவணன்: அதனால இந்த திறப்பு விழா நிச்சயமா நடக்கவே கூடாது. அதோட மட்டும் இல்லாம அந்த திறப்பு விழாக்குள்ள இந்த ராவணன் யாரு, எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான் என்கிற விஷயத்தை எல்லாத்தையும் நம்ம சீக்கிரம் கண்டுபிடிக்கணும், ராவணன் பத்தி எதுவுமே தெரியாமல், அக்கா எல்லாம் அவனை நம்பிகிட்டு இருக்காங்க, ஏதாவது தப்பு நடப்பதற்குள் அவன் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறாள்.

ராவணனின் பிளான்: இதையடுத்து, குணசேகரன் கதிரிடம் பேசும் ராவணன், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு சார். ஆனா, உங்களுடைய அம்மா இந்த விழாவுக்கு வரமாட்டேன்னு சொல்றாங்க அத நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு, ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க உங்க அம்மா, உங்க மேல இருக்கிற கோவத்தினால் தான் அவங்க வரமாட்டேன்னு சொல்றாங்க இந்த திறப்பு விழாவுக்கு அவங்க வந்தா உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X