குணசேகரனின் கொடூர வீடியோ சிக்கியது.. திகைத்து நின்ற ஈஸ்வரி.. மலையில் ஜனனிக்கு நேர்ந்த விபரீதம்!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், ஜனனிக்கு மட்டும் எதாவது ஆச்சுனா எல்லாரையும் வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவேன் என சொல்கிறான். இதனால், சக்திக்கும் கதிருக்கும் இடையே சண்டை வர, குணசேகரன் இருவரையும் சமாதானப்படுத்துகிறார். பின் என்ன சக்தி சொல்ற ஜனனியை காணவில்லை என கேட்க, ஆத்திரமடைந்த சக்தி, எதுவுமே தெரியாதது போல நடிக்காதீங்க, இதுக்கு மேலையும் நீங்க நடிக்க முடியாது. அண்ணியை நீங்கள் அடித்ததற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று சக்தி சொல்ல, குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், சக்தி பேசிய விஷயத்தைக் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அது என்ன வீடியோ? என்று கேட்க, கதிர் உடனே குறுக்கிட்டு, அவன் ஏதோ உளறிக்கொண்டு திரிகிறான் என்று சமாளிக்க முயற்சிக்கிறார். ஆனால் சக்தி, நீங்கள் அண்ணியை கழுத்தைப் பிடித்து சுவரில் முட்டி அடித்த வீடியோ என்னிடம்தான் இருக்கிறது என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி, அந்த வீடியோவை உடனே அனைவரின் முன்னிலையிலும் போட்டு காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

சுவாசி நாதன் இல்லை: மறுபக்கம், ஜனனி சுவாமிநாதனை தேடி மலைப்பகுதியில் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் ஜனனிக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். மேலும், இந்த மலையில் சுவாமிநாதன் என்று யாரும் இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் எங்கும் செல்ல முடியாது. இன்று இரவு எங்கே வீட்டில் தங்கிவிட்டு நாளை செல்லுங்க, என்று கூறுகிறார். அப்போது ஜனனி, மலை அழகாக இருக்கு என்று சொல்ல, அந்த பெண் ஆதங்கத்துடன், இந்தக் காடு வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அழகாகத்தான் தெரியும். ஆனால் இங்கே வாழும் எங்களின் கஷ்டங்கள் யாருக்கும் தெரியாது. குடிக்க நீர் வேண்டுமானாலும் மலையிலிருந்து கீழே செல்ல வேண்டும். மழை பெய்தால் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்குக் கூட அனுப்ப முடியாது. இந்த இயற்கையை ரசிக்கும் பலர் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று வேதனையுடன் பேசுகிறாள்

ஜனனிக்கு என்ன ஆச்சு: இதற்கிடையில், சக்தியின் மீது குணசேகரனுக்கு சந்தேகம் அதிகரிக்கிறது. சக்தி எங்கு செல்கிறான், யாரை சந்திக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும்படி முல்லை மற்றும் கரிகாலனை அனுப்புகிறார். இருவரும் சேர்ந்து சக்தியை ரகசியமாக பின் தொடர்ந்து செல்கின்றன. அதே நேரத்தில், ஜனனி மலையில் அந்த பெண்ணின் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சிலர் திடீரென அங்கு வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்கள் துணிச்சலாக எதிர்த்து நின்று அவர்களை தாக்குகின்றனர். இருந்தபோதிலும், அந்த மர்ம நபர்கள் ஜனனியை அங்கிருந்து கடத்தி செல்கிறார். ஜனனி யாரால் கடத்தப்பட்டார்? சக்தியிடம் இருக்கும் வீடியோ வெளியே வருமா? குணசேகரனின் அடுத்த திட்டம் என்ன? என்ற பல கேள்விகளுடன் இன்றைய எபிசோட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X