ஜனனிக்கு உதவிய துப்பாக்கி பெண்.. குணசேகரனுக்கு வந்த அடுத்த ஆப்பு.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: ஜனனியை காப்பாற்ற அருந்ததி இருவரை துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள். இதை நேரில் பார்த்த ஜனனி அதை நினைத்து அதிர்ச்சியில் இருக்கிறாள். அப்போது பேண்ட், சட்டை அணிந்து அருந்ததி வருவதைக் கண்டு மேலும் குழம்பிப் போகிறார். பின்னர் அருந்ததி தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை ஜனனியிடம் பகிர்ந்து கொள்கிறார். நான் சுட்டதை மட்டும் தான் நீங்கள் பார்த்தீர்கள். ஆனால், அதற்கு பின்னால் நாங்கள் சந்தித்த வேதனைகள், போராட்டங்கள், வழிகள் உங்களுக்கு தெரியாது.

அருந்ததியின் கதை: தனக்கு ஒரு தம்பி இருந்தான். குடும்பமே மகிழ்ச்சியா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். என்னால் படிக்க முடியாததால், தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. என் தம்பி பத்தாம் வகுப்பில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்றதுடன், பன்னிரண்டாம் வகுப்பிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்று நல்லா படிச்சான். அடுத்து கல்லூரி தான், முடித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவார் என அனைவரும் கனவு கண்ட நிலையில், எதிர்பாராத விதமாக நடந்த அந்த சம்பவத்தை சொல்கிறாள். என் தம்பி கல்லூரிக்கு போவதற்கு ரெடியாகிக்கொண்டு இருந்தான் அந்த நேரம், ஊருக்குள் போலீஸ் புகுந்து, அனைவரையும் நடித்து யாரை பற்றியோ விசாரித்தார்கள். அந்த நேரம் எப்படியாவது தம்பியை கலேஜிக்கு அனுப்பிவிடலாம் என அழைத்து செல்லும் போது போலீசார் அவனை சுட்டுவிட்டனர் என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து அருந்ததி அதைவிடுங்க நீங்க யாரைத்தேடி வந்தீங்க அவங்களை பற்றி சொல்லுங்க என்று சொல்ல, ஜனனி தனது போனில் இருக்கும் தர்ஷினியின் போட்டோவை காட்ட, அதை பார்த்த அருந்ததி இந்த பெண்னை நான் பார்த்து இருக்கேன். ஆனால், இந்த மலையில் இல்லை இங்கிருந்து இரண்டு மலையில் இருக்கும் இடத்தில் பார்தேன் என்று சொல்கிறார். நிச்சயமாக தர்ஷினியை காப்பாற்றி விடலாம், அதற்கு முன் நான் அங்கிருப்பவர்களிடம் இதுபற்றி விசாரிக்கிறேன் என்றார்.

ஜனனி இனி இந்த வீட்டுக்கு வரக்கூடாது: மறுபக்கம் குணசேகரன் வீட்டில், ஈஸ்வரி அழுதுக்கொண்டு இருக்க, அப்போது குணசேகரன், தர்ஷினி நிச்சயம் கிடைப்பதால், நீ கவலைப்படாதே என்று சொல்கிறார். மேலும், எல்லாத்துக்கும் காரணமான அந்த ஜனனியை நான் சாதாரணமாக நினைத்து விட்டேன். ஆனால், அவள் இந்த குடும்பத்திற்கு இப்படி ஒரு துரோகத்தை செய்துவிட்டால் என்று சொல்கிறார். மேலும், இதற்கு மேல் ஜனனி இந்த வீட்டுக்குள் வரக்கூடாது, நந்தினி, ரேணுகா நீங்களும் இனிமே அவக்கூட பேசக்கூடாது என்கிறார். உடனே கதிர், புரியுதா, இனி மேல் நீ அந்த குடும்பத்தை கெடுத்தவக்கூட பேசக்கூடாது என சத்தியம் செய் என்கிறார். நந்தினி இப்போ இதுதான்பிரச்சைனயா தர்ஷினியை கண்டுபிடிப்பதை விட்டு விட்டு சத்தியம் செய்ய சொல்றீங்க என கேட்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

வழக்கின் தேதி: இதையடுத்து, வீட்டுக்கு வரும் வழக்கறிஞர் வழக்கின் தேதி வந்துவிட்டது. அந்த தேதியில் நீங்கள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று சொல்கிறார். மேலும், அதுவரைக்கும் நீங்களும் உங்க தம்பிகளும் இந்த வீட்டை விட்டு ஓடக்கூடாது என்று சொல்ல குணசேகரன் அது எப்படி, என் மகளை காணவில்லை அப்படி இருக்கும் போது வெளியில் போகாமல் எப்படி இருக்க முடியும் என கேட்கிறார். இதையடுத்து என்ன நடக்கபோகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X