Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் ஈ, சுந்தரபாண்டியன், பாகன் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி
விடுமுறை தினம் வந்தாலே போதும் சிறப்பு நிகழ்ச்சிகளையும், நடிகைகளின் பேட்டி, சிறப்பு திறப்படங்கள் போன்றவைகளை ஒளிபரப்பி விளம்பரங்கள் மூலம் கல்லா கட்டிவிடுவார்கள். இதில் புத்தம் புதுப்படங்களை யார் ஒளிபரப்புவது என்ற போட்டி வேறு ஏற்படும்.
ஒரே நடிகர் நடித்த படத்தை இரண்டு மூன்று சேனல்களில் போட்டு மக்களை குழப்புவார்கள். இனி தொடர்ந்து பண்டிகை விடுமுறைக் காலம் வர உள்ளதால் சன் டிவி அதற்கேற்ப ரசிகர்களை கவரும் வகையில் இப்பொழுது இருந்தே நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கிவிட்டனராம்.
ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல் என விடுமுறைக் காலங்கள் தொடர்ந்து வர உள்ளன. அதற்கேற்ப புத்தம் புதுப்படங்களின் சேட்டிலைட் உரிமையை சத்தமில்லாமல் கைப்பற்றியுள்ளது.
கலகலப்பு, நான் ஈ, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், மிரட்டல், சுந்தரபாண்டியன், பாகன், பிட்ஸா போன்ற பிரபல படங்கள் சன் டிவி வசம் உள்ளதால் வரிசையாக விடுமுறை தினங்களில் அவற்றை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது சன் டிவி. இதன் மூலம் அதிக அளவில் விளம்பரங்களை பெற முடியும் என்றும் எதிர்பார்க்கின்றனர் சன்டிவி நிர்வாகத்தினர்.