Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
சன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்
சன்டிவியில் இத்தனை நாட்களாக ஆதிக்கம் செலுத்திய நாகினி பாம்பு வெளியேறி விட்டது. இப்போது புதிதாக நந்தினி பாம்பு குடியேறியுள்ளது.
சென்னை : பாம்பும், பேயும் இருக்கிறவரைக்கும் தொலைக்காட்சிகளில் டிஆர்பி ரேட்டிங் எகிறிக்கொண்டுதான் இருக்கும். ஹிந்தி டப்பிங் சீரியலாக இருந்தாலும் நாகினி மவுனிராய்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
கடந்த சில மாதங்களாகவே இரவு பத்து மணிக்கு மேல் மகுடி சத்தமும், பாம்புகளில் புஸ் புஸ் சத்தம்தான் கேட்கும். கார்த்திக், ஷிவன்யா இப்போது ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
நாகினி ஷிவன்யாவின் வயிற்றில் இப்போது இருப்பது குட்டி நாகினியா, அல்லது மானிட பிறவியான கார்த்திக்கா என்ற சஸ்பென்ஸ் உடன் முடிந்து விட்டது. நாகினி முடிநது விட்டதே என்று ரசிகர்களே வருத்தப்படாதீர்கள் நந்தினியாக நான் வருகிறேன் என்று அட்டென்டன்ஸ் போட்டுள்ளது ஒரு பாம்பு.
நந்தினி
நாகினி முடிந்தால் என்ன நந்தினியாக உங்கள் வீட்டுக்குள் வருகிறேன் என்று புதிதாக ஒரு சீரியல் வந்துள்ளது. இதில் வரும் பாம்பு பிரம்மாண்டம்தான். இரண்டு அழகான இளம் நாயகிகள் அறிமுகமாகியுள்ளனர்.
திரை நட்சத்திரங்கள்
குஷ்புவின் ஆத்துக்காரர் சுந்தர்.சி தயாரிப்பு என்பதால் சினிமா திரை நட்சத்திரங்கள் விஜயகுமார், சிங்கம்புலி என அறிமுகமானவர்களும் சீரியலில் நடித்துள்ளனர். ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது.
பாம்பு புற்று
மிக பிரம்மாண்டமான வீடு, வீட்டிற்கு முன்பு பெரிய பாம்பு புற்று. புற்றுக்குள் கட்டுப்பட்ட பாம்பு என சீரியல் நகர்கிறது. நாயகன், நாயகி சின்னத்திரை உலகத்திற்கு அறிமுகம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். கனவில் பயமுறுத்தும் பாம்பு, பழிவாங்கும் பேய் என போகிறது
மனதில் இடம் பெறுவாளா?
நாகினி மவுனி ராய் ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறார். இப்போது வந்துள்ள நந்தினி, நாகினியை விரட்டிவிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பெறுவாளா பார்க்கலாம்.
பிரியமானவள் போச்சேப்பா?
நாகினி நந்தினி கலவரத்தில் பிரியமானவள் நேரம் மாறிவிட்டது. அழகான மாமியார் உமா, அவந்திகா, பூமிகா, கவிதாவை எல்லாம் இனி ஒரு மணிநேரம் கழித்துதான் பார்க்க முடியுமா? அதை கொஞ்சம் எல்லாரும் பார்க்கும் நேரத்திற்கு மாற்றலாமே என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!