பொதுமக்களால் தாக்கப்பட்ட ரோஜா சீரியல் நடிகர்… என்னடா இப்படியாகிப் போச்சு !
சென்னை : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

சன் டிவியில் வானத்தைப் போல, எதிர் நீச்சல் போன்ற பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இந்த ரோஜா சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மற்றும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிப்பு சூர்யனையும் இல்லத்தரசிகள் ரசிக்கத் தொடங்கியது தான் இந்த சீரியலின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்துள்ளது.

பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்த பெண், தனது பேத்தி இல்லை என்று அன்னப்பூரணிக்கு தெரிந்து அனுவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். ஆனால் அவள் இப்போது அர்ஜூனின் எதிர் தரப்பு வக்கீலிடம் ஜூனியரக சேர்ந்துகொண்டார். இப்போது அர்ஜூன் குடும்பத்துடன் அனு கோர்ட்டில் மோதிக்கொண்டு இருக்கிறார். அனு வில்லியாக இருந்த போது அவள் செய்யும் வில்லத்தனத்திற்கும், பதில் கொடுத்த அர்ஜுன். இப்போது இரு வக்கீல்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஆக்ஷன் மற்றும் புத்தி கூர்மையாக யோசித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த தொடரில் அடுத்து நடக்கப்போகும் ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அர்ஜுனை பொது மக்கள் போலீஸ் நிலையில் முன் கடுமையாக தாக்குகிறார்கள். அவரைக் காப்பாற்ற ரோஜா, சாண்டி, சந்திரகாந்தா ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். இந்த காட்சி தான் அடுத்து ரோஜா தொடரில் வரப்போகிறதாம். எதற்கு அர்ஜூனை பொதுமக்கள் தாக்குகிறார்கள் என்பதுதான் ட்விஸ்ட்.


Click it and Unblock the Notifications











