Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பொதுமக்களால் தாக்கப்பட்ட ரோஜா சீரியல் நடிகர்… என்னடா இப்படியாகிப் போச்சு !
சென்னை : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
சன் டிவியில் வானத்தைப் போல, எதிர் நீச்சல் போன்ற பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இந்த ரோஜா சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மற்றும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிப்பு சூர்யனையும் இல்லத்தரசிகள் ரசிக்கத் தொடங்கியது தான் இந்த சீரியலின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்துள்ளது.
பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்த பெண், தனது பேத்தி இல்லை என்று அன்னப்பூரணிக்கு தெரிந்து அனுவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். ஆனால் அவள் இப்போது அர்ஜூனின் எதிர் தரப்பு வக்கீலிடம் ஜூனியரக சேர்ந்துகொண்டார். இப்போது அர்ஜூன் குடும்பத்துடன் அனு கோர்ட்டில் மோதிக்கொண்டு இருக்கிறார். அனு வில்லியாக இருந்த போது அவள் செய்யும் வில்லத்தனத்திற்கும், பதில் கொடுத்த அர்ஜுன். இப்போது இரு வக்கீல்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஆக்ஷன் மற்றும் புத்தி கூர்மையாக யோசித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த தொடரில் அடுத்து நடக்கப்போகும் ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அர்ஜுனை பொது மக்கள் போலீஸ் நிலையில் முன் கடுமையாக தாக்குகிறார்கள். அவரைக் காப்பாற்ற ரோஜா, சாண்டி, சந்திரகாந்தா ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். இந்த காட்சி தான் அடுத்து ரோஜா தொடரில் வரப்போகிறதாம். எதற்கு அர்ஜூனை பொதுமக்கள் தாக்குகிறார்கள் என்பதுதான் ட்விஸ்ட்.