இணையத்தில் ஆபாச மார்பிங் போட்டோ.. நான் ஏன் சாகணும்.. நீ சாவு.. கேப்ரில்லா தரமான பேச்சு!
சென்னை: 'சுந்தரி' சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ். துணிச்சலான பெண்ணான இவர் கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் டிவி 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கேப்ரில்லா செல்லஸ். தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து, ஸ்டேன் ஆப் காமெடி அசத்தினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தன்னுடைய திறமையால், டிக் டாக்கில் கருத்து வீடியோவை பதிவிட்டு எடுத்தார். சின்னத்திரை, சோசியல் மீடியாவில் மட்டும் தலைகாட்டி வந்த கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 படத்திலும் நடித்தார்.

சுந்தரி சீரியல்: இதையடுத்து, சன் தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் லீட் ரோலில் நடித்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தரி சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. இதில், சுந்தரி தனது கனவை கடுமையாக போராடி அடைகிறாள். சுந்தரி சீரியல் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த கேப்ரில்லாவிற்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.
நான் ஏன் சாகணும்: இந்நிலையில், மகளிர் தினத்தை கல்லூரியில் ஒன்றில் கேப்ரில்லா செல்லஸ், பேசிய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், ஒரு ஆபாசமான போட்டோவில் என் முகத்தைவைத்து பதிவிட்டு இருந்தார்கள். முகம் மட்டும் என்னுடையது, அந்த உடல் என்னுடைய இல்லை, அதை நான் இணையத்தில் பார்த்துவிட்டு கடந்து தான் சென்றேன். ஏன் என்றால் எனக்கு தெரியும் அது என்னுடைய உடல் இல்லை. மற்றவர்கள் செய்யும் கீழ்தனமான, அசிங்கத்திற்கு நாம் ஏன் வேதனைப்பட பயப்பட வேண்டும், மற்றவர்கள் செய்யும் தவறு, கீழ்தனமான செயலுக்கு நாம் ஏன் வருத்தப்பட வேண்டும், சாகவேண்டும். அவன் செய்த தவறுக்கு அவன் சாக வேண்டும், கர்மாவை அவன் அனுபவிப்பான், தவறகாக முடிவை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் எடுக்காதீர்கள், இதுபோன்ற சூழ்நிலையில் தான் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என


Click it and Unblock the Notifications











