Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
''ஆவிகளுக்குப் பிரியமானவள்'': மூட நம்பிக்கையை வளர்க்கும் டிவி தொடர்கள்
சிவசங்கரி (சன் டிவி), ருத்ரம் (ஜெயா டிவி) ஆகிய ஆவி தொடர்கள் வரிசையில் தற்போது புதிதாக பைரவி (சன் டிவி) சேர்ந்திருக்கிறது.
பாம்பு பற்றி ஒரு காலத்தில் தொடர்கள் அதிகம் வெளிவந்த நிலையில் மீண்டும் டிஆர்பி ரேட்டிங்கிற்காக இப்போது ஆவி, பேய், சாமி என கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.
பைரவி என்ற தொடர் தற்போது ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் கதாநாயகியாக நடித்திருப்பவர் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராதா. இதில் கதாநாயகியின் அம்மாவாக பெரியதிரையின் முன்னாள் கதாநாயாகி ஊர்வசி நடித்திருக்கிறார்.
கதாநாயகியின் கண்களுக்கு மட்டுமே ஆவி தெரிகிறதாம்! அவருக்கு மட்டுமே அந்த அபூர்வ சக்தி இருக்கிறதாம்! அவர் அந்த ஆவிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கிறாராம்.
சிறுவர்கள் உதறலோடு இந்த தொடரை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரிகம நிறுவனம் இந்த நெடுந்தொடரை தயாரித்துள்ளது. சண்முகம் இயக்கியுள்ளார். இது போன்ற தொடர்களை ஒளிபரப்புவதன் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பது தெரியவில்லை.