Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சன் டிவி நாகினிக்கு சரியான போட்டி விஜய் டிவியின் மாய மோகினி
சென்னை: இது பாம்பு, பேய் சீசன் காலம் என்பதை டிவி சீரியல்களும் விடாமல் பிடித்துக்கொண்டுள்ளன. எந்த சேனலைப் போட்டாலும் பாம்பு, பேய் என சீரியல்கள் வரத்தொடங்கிவிட்டது.
ஜீதமிழ் தொலைக்காட்சியில் நாகராணி என்ற இந்தி சீரியலை டப் செய்ய அதே கதையம்சம் உள்ள நாகினி என்ற சீரியலை சன்டிவி ஒளிபரப்ப தொடங்கியது. மாலை நேரத்தில் கேளடி கண்மணி என்ற தொடரில் பாம்பை கொண்டு வந்த சன் டிவி, மதிய நேரத்தில் சந்திரலேகாவில் புதிதாக ஆவியை புகுத்தியுள்ளனர்.
பேய், பாம்புகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்த விஜய் டிவியும் தன் பங்குக்கு தற்போது மாய மோகினி என்ற டப்பிங் சீரியலை ஒளிபரப்ப உள்ளனர். விஜய் டிவிக்கு டப்பிங் சீரியல் புதிதில்லை. அமானுஷ்ய தொடர்களும் புதிதில்லை. இந்த பேய் கவர்ச்சியாய், கொஞ்சம் கலவரம் ஏற்படுத்தச் செய்கிறது. ஹீரோயினைச் சுற்றிவரும் மோகினிப் பேய் பண்ணும் சேட்டைகளை காட்டும் டிரெய்லரே அச்சத்தை அதிகரிக்கத்தான் செய்கிறது.
சன் டிவியில் ஏற்கனவே 'நாகினி' சீரியலில் ஷிவன்யா ரசிகர் மன்றம் ஆரம்பித்த பல இளசுகளைக் கவர, விஜய் டிவி களமிறக்கும் புத்தம்புது சீரியல் ஆயுதம்தான் 'மாய மோகினி' சீரியல். "டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி எங்கள் வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள்" என்று ஒரு புறம் சின்னத்திரை நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னொரு புறம் முன்னணி சேனல்கள் போட்டிபோட்டுக் கொண்டு இந்தி சீரியல்களை இறக்குமதி செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
|
மாயமோகினி யார்
இரண்டு பெண்கள் முக்கிய கதாபாத்திரம். ஒருவனை தீவிரமாக காதலிக்கும் பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். ஆனால் அவளின் ஆன்மா அந்த இளைஞனையே சுற்றிச் சுற்றி வருகிறது. அந்த இளைஞனுக்கு திருமணமாகிறது. மனைவியின் ஆன்மா மூலம் அந்த இளைஞனோடு வாழ துடிக்கிற பெண்ணின் கதை.
|
விநாயகர் சதுர்த்திக்கு மாயமோகினி
மாயமோகினி வருகிற 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு ஒளிப்பாகிறது. இந்த மாயமோகினி அந்த நாகினியை வெல்வாளா என்பது ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.
சமூக வலைத்தள சண்டை
சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் நாகினி பாம்பையும், மோகினிப் பேயையும் ஆளுக்கொன்றாக தத்துக் கொடுத்துவிட்டது அந்த இந்திச் சேனல்.
சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக நாகினிக்கும் மாயமோகினிக்கும் ஆதரவாக இப்போதே சண்டை போட ஆரம்பித்து விட்டனர்.
பேய் பெண்கள்
பேய் புகப் போகும் பெண்ணாக நடித்திருக்கும் இந்தி சீரியல் கதாநாயகி மோனா சிங். பேய் இப்போதைக்கு மகேக் சஹால்...அப்புறமா சரா கான்.
ஹீரோயின் கணவராக வரும் ஹீரோவின் பெயர் விவேக் தாஹியா. இந்தி ‘கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் ஹீரோயின் 'திவ்யங்கா' பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொண்ட காதல் கணவர்.
கதை என்ன?
இந்தியிலேயே இதன் கதைக்கருவாக சொல்லப்படுவது ‘சத்தியவான் - சாவித்ரி' ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி தான். அதன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, களத்தை முழுவதுமாக மாற்றித்தான் சீரியல் எடுத்திருக்கிறார்களாம். பேய் சீரியலில் கதையா முக்கியம் பேசமா சீரியலை பார்த்து ரசிங்க மக்களே என்கிறது விஜய் டிவி.