Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நட்சத்திர கொண்டாட்டம் .. சன் டிவி VS விஜய் டிவி
கடந்த இரண்டு நாட்களாக ஜூன் 29,30 தேதிகளில் விஜய் விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. நட்சத்திரப் பட்டாளங்கள் குவிந்து கிடந்த இந்த நிகழ்ச்சிக்கு டி ஆர் பி கிடைத்து விடக்கூடாதே என்ற போட்டி மனப்பான்மையில் சன் குழுமத் தொலைக்காட்சிகளில் ஒன்றான கே டிவியில் இயக்குநர் சங்கத்தின் 40 ம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் ஒளிபரப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் வேறொரு நாளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த அரதப் பழசான இந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்ததன் மூலம் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்துக் கொண்டது சன் குழுமம்.
கலர்ஃபுல் நடனம், அட்டகாசமான பாடல்கள் என களை கட்டிய விஜய் டிவி விருது நிகழ்ச்சிக்கே ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று தெரிந்தும் டி 40 நிகழ்ச்சியை கேடிவியில் ஒளிபரப்ப காரணம் என்ன என்பதுதான் பெரும்பாலோனோர் கேள்வியாகும்.
வெள்ளிக்கிழமை சன் டிவியில் சீரியலுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மாற்ற முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் கேடிவியில் ஒளிபரப்பானது டி 40 நிகழ்ச்சி என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர். எது எப்படியோ ஆளே இல்லாத டீ கடைக்கு எதுக்குடா டீ ஆத்துறீங்க? என்று விவேக் கேட்பதைப் போல மக்களே பார்க்க விரும்பாத ஒரு நிகழ்ச்சியை ஏன் மறுபடி மறுபடி சன் குழுமத்தில் ஒளிபரப்பு செய்கின்றனர்? என்பதே தொலைக்காட்சி ரசிகர்களின் கேள்வியாகும்.