Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காத்துவாக்குல ரெண்டு ‘ஆங்கர்‘… கலாய்த்த மாகாபா...விஜய் டிவியை விட்டு போக முடிவெடுத்த பிரியங்கா
சென்னை : வெளிநாட்டு ஆங்கரே எனக்கு போதும் என்று மாகாபா சொன்னதால் கோபத்தில் விஜய் டிவியை விட்டு போகிறேன் என்றார் பிரியங்கா. என்ன ஆச்சு என ப்ரமோவை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுவும், விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான பிரியங்கா மற்றும் மா கா பா இணைந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சும்மா அடி தூள் தான்.
இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
என்னது 150 தங்கச்சியா... உயரமானவர்கள் வலி சொல்லும் நீயா நானா நிகழ்ச்சி!
சூப்பர் சிங்கர் முதல் சீசன் 8
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் முதல் சீசன் தொடங்கி தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 8வது சீசன் தொடங்கும் போது பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால், நிகழ்ச்சியை மா.கா.பாவுடன் மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிரியங்கா
இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நுழைந்ததால், மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். பின்னர் பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிறகு பிரியங்கா தனது பிக்பாஸ் நண்பர்களுடன் அவுட்டிங் சென்றதால், மீண்டும் மைனா நந்தினியே மா.கா.பா ஆனந்துடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
காத்துவாக்குல ரெண்டு ஆங்கர்னு
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், இனிமே இந்த நிகழ்ச்சிக்கு Host பிகா இல்ல மிகா என்று கத்துகிறார் மா.கா.பா. உடனே பிரியங்கா 'மிகா' வந்ததும் பிகாவை மறந்துட்டீயே என்று கேட்கிறார். உடனே மா.கா.பா ஆனந்த், சரி காத்துவாக்குல ரெண்டு ஆங்கர்னு வெச்சிப்போம் என்கிறார்.
அட்ராசிட்டி
இந்த, ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஆமாம் இது பாட்டு பாடுற நிகழ்ச்சியா? இல்ல காமெடி நிகழ்ச்சியா? என கேட்டுள்ளார். அந்த அளவுக்கு மா.கா.பா மற்றும் பிரியங்காவின் அட்ராசிட்டி தரமாக உள்ளது. இன்று இரவு அனைவரும் நிகழ்ச்சியை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.