Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ராஜ் டிவியில் ஸ்வர்ண சங்கீதம் சீசன்–3 நித்ய ஸ்ரீ மகாதேவன் நடுவராக பங்கேற்பு
ராஜ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ''ஸ்வர்ண சங்கீதம்" நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக சங்கீத பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் நடுவராக இணைந்துள்ளார்.
கர்நாடக இசைப்பாடகர்கள் பங்கேற்கும் ஸ்வர்ண சங்கீதம் சீசன் ஒன்று, இரண்டு வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் தற்போது தொடங்கியிருக்கிறது. முக்கிய நகரங்களில் தங்க குரலுக்கான தேடல் நடைபெற்றது.
தங்களது குரல் வளத்தை உலகிற்கு பறைசாற்றுவதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் தங்களது இனிய குரல் வளத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
நித்யஸ்ரீ மகாதேவன்
ஸ்ரீசித்ரா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபநாசம் அசோக் ரமணி, ஆகியோருடன் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பங்கேற்றுள்ளார்.
10 திறமைசாலிகள்
முதற்கட்ட போட்டியில் தேர்வாகும் 50 போட்டியாளர்களில் முதல் 10 சுற்றுகளுக்குள் நுழையப்போகும் 10 திறமைசாலிகள் யார்?
சுதாரகுநாதன், சவுமியா
இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் போட்டியாளரை, ஒவ்வொரு சுற்றுகளிலும் பிரபல இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், சவுமியா ஆகியோர் தேர்வு செய்வர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்
சங்கீத வித்வான் பாலமுரளி கிருஷ்ணா, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், போன்றோர் இறுதிச்சுற்றில் நடுவர்களாக பங்கேற்று திறமைசாலிக்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.