Don't Miss!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வெற்றிகரமான இரண்டாம் ஆண்டில் மகாபாரதம்
சன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடருக்கு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.
ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது மகாபாரதம்.
வரவேற்பு
அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் பிரமாண்டமான அரங்கங்களும் அவ்வப்போது புது விஷயங்களை கலந்து கதை சொல்வதாலும் மற்றும் பரிச்சயமான தமிழ் நடிகர், நடிகைகள் நடிதிருப்பதாலும் ரசிகர்களிடம் இத்தொடர் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பிரமாண்ட அரங்கம்
நாற்பது லட்சம் செலவில் கலை இயக்குனர் வசந்த்ராவ் குல்கர்னியால் உருவாக்கப் பட்ட பிரமாண்டமான அரங்கத்தில் திரௌபதி சுயம்வரம் நிகழ்ச்சியை பெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்குனர் செங்கோட்டை சி.வி.சசிகுமார் இயக்கத்தில் நான்கு கேமராக்கள் கொண்டு ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார் படமாக்கினார்.
வரும் வாரங்களில்
வரும் வாரங்களில் ஒளிபரப்பாகவிருக்கும் திரௌபதி சுயம்வரம் மற்றும் அதை தொடர்ந்து பாண்டவர்கள் ஐவருடனான திருமணம் போன்றவற்றில் இடம் பெறும் பிரமாண்டம் மற்றும் திரௌபதியின் முற்பிறப்பு அதை தொடர்ந்து ஐவரை மணந்து கொள்ளும் திரௌபதியின் திருமணத்தில் மறைந்திருக்கும் ரகசியங்கள், சூட்சுமங்கள் முதலியவற்றை வியாசர் பெருமான் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பகவான் தத்துவார்த்தமான ஆதாரங்களுடன் விளக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று தயாரிப்பாளர் சுனில் மேத்தா நம்பிக்கையோடு தெரிவித்தார்.
தமிழ் நட்சத்திரங்கள்
பூவிலங்கு மோகன், ஓ.எ.கே.சுந்தர், சாட்சி சிவா, கணேஷ்ராவ், ரமேஷ் பண்டிட், வெற்றிவேலன், சத்யா, ரவி பட், விஜய் கிருஷ்ணராஜ், திரௌபதியாக நிஷா, ருக்மணியாக நீலிமா, சுபத்திரையாக ஷாமிலி ஆகியோர் நடிக்கின்றனர்.
கதையாக்கம் - ஜெகதா, திரைக்கதை - அபிராம், வசனம் - வேட்டை பெருமாள் , தேவா இசையமைத்துள்ளார். தமிழ் மகாபாரத தொடரை சினிவிஸ்டா சார்பில் சுனில் மேத்தா மற்றும் பிரேம் கிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
-
Actor Kamal haasan: பிரித்விராஜ் கிட்ட இதை எதிர்பார்க்கலை.. ஆடு ஜீவிதம் படத்தை மணிரத்னத்துடன் பார்த்த கமல்!
-
Seshu: கடைசியா ரீ-யூனியன் ஷோ ஒன்றை நடத்தி எல்லாரையும் மீட் செய்ய வச்சாரு.. லொள்ளு சபா ஜீவா உருக்கம்!
-
அடக்கடவுளே.. 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்னு சொன்னாங்களே.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவலையா?