Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
maharasi serial: ஏற்கனவே ஒரு கல்யாணம்.. இதுல இன்னும் ரெண்டு தாலியாம்!
சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலை பலரும் விரும்பிப் பார்க்க ஆரம்பித்த காரணமே அதன் ப்ரோமோதான். அதை பத்தி பிறகு பார்க்கலாம். இப்போ கதையில் வரும் தமிழரசனுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆயிருச்சு.
இப்போ அத்தைப் பொண்ணுங்க ரெண்டு பேரும் தமிழை கல்யாணம் செய்துக்க போட்டி போடறாங்க. அவங்கவங்க அம்மாக்களும் கூட போட்டி போட்டுக்கிட்டு, ரெண்டு தாலி ஆர்டர் குடுத்து வாங்கி வைக்கறாங்க.
ரெண்டு முகூர்த்தப் புடவை, ரெண்டு மாலை செட்.. இப்படியே ரெண்டு ரெண்டா அடுக்க, கல்யாணம் மண்டபமாவது ஒண்ணா ரெண்டா அத்தைன்னு கடுப்பில் கேட்கிறான் தமிழ்.
மகராசி ப்ரோமோ
மகராசி சீரியலின் ப்ரோமோவில் ஆரம்பத்தில் ஹரித்துவார் கதையை காண்பிச்சாங்க. விதம்விதமான வித்தியாசமான லொக்கேஷன், அதுவும் கங்கை நதியின் நடுவில் பிரமாண்ட சிவன் இருக்கும் ஒரு புண்ணிய பூமியில் ஷூட்டிங் நடக்குது என்றால், டிவியிலாவது இதை பார்க்கலாம் என்று எல்லாருக்கும் ஆசை இருக்காதா? அதே ஆசையில் பார்க்க ஆரம்பித்து இன்றுவரை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
kanmani serial: அடியே அத்தைக்காரி... நீ செத்தடி.. ப்ப்பா.. என்ன பேச்சு பேசறா!
ராகினி தமிழ்
தமிழ் ராகினியை காதலித்து கல்யாணம் செய்துகிட்டதில் . ஒரு குழந்தையும் கையில் இருக்கு. ஆனால், அந்த குழந்தையும் வேணாம், நீயும் வேணாம்னு தமிழையும் குழந்தையையும் தனியா விட்டுட்டுப் போயிட்டா ராகினி. இப்போ குழந்தைக்கு தாய் வேணுமே... இரு அத்தை பெண்களில் ஒருத்தியை கல்யாணம் செய்து வச்சுடலாம்னு அம்மா, அப்பா முடிவு எடுக்கறாங்க.
இருவருக்கும் ஆசை
அத்தைகள் இருவருக்கும் தமிழை மருமகனாக்கிக்க ஆசை. அதோட, இரு அத்தை பெண்கள் காயத்ரி வான்மதி இருவருக்கும் தமிழ் மாமா மேல ஆசை. அடிச்சுக்காத குறையா போட்டி போட்டுக்கறாங்க. குழந்தையை கீழே விட்டால், காயத்ரியை நோக்கி வருதா இல்லை வான்மதியை நோக்கி வருதான்னு டெஸ்ட் வைக்க, தமிழின் அண்ணன் பொண்டாட்டி பாரதி.. கதையின் ஹீரோயின், கோபமா குழந்தையைத் தூக்கிகிட்டு, இதென்ன சோதனை.. தமிழுக்கு இன்னொரு கல்யாணம் தேவை இல்லை. ராகினியை திரும்ப இந்த வீட்டுக்கு அழைச்சுட்டு வருவேன்னு சொல்றா.
இருந்தாலும் ஏற்பாடுகள்
இருந்தாலும் இரு அத்தைகளும் கல்யாண ஏற்பாட்டை செய்யறாங்க. யாருடன் தமிழுக்கு கல்யாணம் கூடி வருதோ, அவங்களோடு தமிழுக்கு கல்யாணம் நடக்குமாம். தமிழின் அப்பா அம்மாவும் இதை ஏத்துக்கறாங்க. அப்புறம்தாங்க காமெடி...ஒரே வீட்டுக்கு ஆச்சாரி வந்து ரெண்டு தாலி செய்து குடுத்துட்டு போறார். ரெண்டு முகூர்த்தப் புடவை எடுக்கறாங்க.
கோவத்தில் தமிழ் கத்தறான்.. உங்களுக்கே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லையா? மண்டபமாச்சும் ஒன்னு பார்த்தீங்களா, இல்லை ரெண்டான்னு கத்தறான்.ஆனால், இன்னொரு கல்யாணத்துக்கு ரெடியாத்தான் இருக்கான் தமிழ்.