Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!
சன் டிவியில் தொடங்கி விஜய் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் டிவி உள்ளிட்ட பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காலை நேரத்தில் ராசிபலன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. சன் டிவியில் மட்டும் ஜோசியர் எழுதிக்கொடுத்த ராசி பலனை தொகுப்பாளினி படிப்பார். மற்ற தொலைக்காட்சிகளில் டைரக்டாக சம்பந்தபப்ட்ட ஜோசியர்கலே ஸ்டூடியோவுக்கு வந்து உட்கார்ந்து உங்களது ராசிபலனைக் கூறுவார்கள்.
எண்கணித ஜோதிட நிகழ்ச்சியில் நேரலை வேறு உண்டு. நேயர்களின் கேள்விகளுக்கு எண்கணித பண்டிதர்!!!! விளக்கம் அளிப்பார். இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மக்கள் அதை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் ஏதாவது ஒரு நல்ல விசயத்திற்கு கிளம்பும் நேரத்தில் இதுபோன்ற ராசிபலனை பார்க்க நேரிட்டால் அதில் கூறப்படும் பலன் நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அதேசமயம் கெடுதல் பலன்களை ஜோசியர் கூறிவிட்டால் போதும் அன்றைக்கு முழுவதும் மனம் அந்த ராசிபலனை சுற்றிக்கொண்டே இருக்கும். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தால் கூட பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் தினசரி காலையில் ராசிபலனை பார்த்து விட்டுத்தான் மறுவேளை பார்ப்பார்கள்.
தொலைக்காட்சிகளில் ராசிபலன் நிகழ்ச்சியை பார்த்தாலே திருமலை படத்தில் விவேக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வரும்.
அந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் இன்டர்வியூவிற்கு கிளம்பிக் கொண்டிருப்பார். அப்பொழுது தொலைக்காட்சியில் ராசி பலன் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். அதில் பலன் கூறும் ஜோசியர் குறிப்பிட்ட ராசியைக் கூறி இந்த ராசிக்குரிய அன்பர்கள் சிவப்பு, வெள்ளை நிறத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார். உடனே விவேக் தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி விடுவார்.
நீங்கள் தவிர்க்க வேண்டிய திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என்று ஜோசியர் கூறுவார்.
உடனே விவேக், அடப்பாவிகளா இருக்கிறதே நாலு திசைதானே. நாலு திசையிலும் போகக் கூடாதுன்னு சொன்னா எந்த திசையில நான் இன்டர்வியூ போறது என்று கேட்பார்.அந்த நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். அப்பொழுது விவேக், மற்றவங்களுக்கு ராசிபலன் சொல்றதுக்கு முன்னாடி உங்க ராசிபலன் எப்படியிருக்கு கொஞ்சம் பார்த்துக்கொள்ளக்கூடாதாடா என்று பஞ்ச் அடிப்பார்.
அதற்காக ராசிபலனை ஒளிபரப்பும் எல்லா தொலைக்காட்சிகளும் பொய்யான ஒன்றை ஒளிபரப்புகின்றன என்று கூறவில்லை. ஜோசியமும், ஜாதகமும் மனிதர்களின் வசதிக்காகத்தானே தவிர அவைகளுக்காக நம்மை மாற்றிக்கொள்ளக்கூடாது. குருபெயர்ச்சி சரியில்லை, சனிப்பெயர்ச்சி சாதகமில்லை. ராகு, கேது சுற்றிக்கொண்டிருக்கிறான் என்று ஜோசியர்கள் கூறுவதை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விடுவதே நமக்கு நன்மை.
அது சரி நீங்க எத்தனை பேர் காலையில ராசிபலன் பார்த்துட்டு வேலையை ஆரம்பிக்கிறீங்க?