நிழல் திருமணத்திற்கு தயாராகும் நட்சத்திரா.... கல்யாணத்திற்கு அழைப்பு விட்டுருக்காங்க!
சென்னை : பிரபல சீரியல் நடிகை நக்ஷத்ராவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
தற்போது இவர் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இதில் ஹீரோவுடன் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

சிறப்பான தொகுப்பாளர்
சன் டிவியின் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் நக்ஷத்ரா. இவர் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். லஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து சிறப்பான பெயரை பெற்றார். மேலும் சில குறும்படங்களிலும் இவர் நடித்து புகழ் பெற்றார்.

பள்ளித் தோழனை மணந்த நக்ஷத்ரா
இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்த ராகவ் என்பவரை இவர் சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து தனது திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும் அதன் வீடியோக்களையும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து நடிப்பு
இந்த திருமணத்தையடுத்து அவர் தமிழும் சரஸ்வதியும் தொடரிலிருந்து விலகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. இதையடுத்து நக்ஷத்ராவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் ஒருபக்கம், தன்னுடைய மாமியாருடன் இணைந்து டான்ஸ் வீடியோவையும் போஸ்ட் செய்யும் நக்ஷத்ரா, மறுபக்கம் தனது மற்ற கமிட்மெண்ட்களையும் தொடர்ந்து வருகிறார். சீரியலிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நிழல் திருமணம்
தொகுப்பாளர் தீபக்குடன் அவர் நடித்துவரும் தமிழும் சரவஸ்தியும் தொடரிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் இவர்களது திருமணம் தற்போது நடைபெறவுள்ளது. இதையொட்டி விஜய் டிவியும் தொடர்ந்து பல்வேறு பிரமோக்களை வெளியிட்டு வருகிறது.

ரசிகர்களுக்கு அழைப்பு
திருமண காஸ்ட்யூமில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பல்வேறு கோலாகலங்களை செய்து வருகின்றனர். மேலும் தங்களது திருமணத்திற்கு ரசிகர்களையும் அழைத்து வருகின்றனர். இந்த தொடரில் நிஜக் கல்யாணம் போல இன்விடேஷன் எல்லாம் அடித்து நடத்தப்பட்டு வருகிறது.

வில்லியின் முயற்சி
தமிழ் மற்றும் சரஸ்வதியின் காதல் குறித்து தெரிந்த வில்லி, அதை கோதை அம்மாவிடம் தெரியப்படுத்த அவர், அவர்களின் காதல் முன்னமே தெரியும் என்று முடித்து வைக்கும்படியாக காட்சிகள் சீரியலில் அமைந்துள்ளது. இதன்மூலம் கல்யாணம் நின்றுவிடுமோ என்று நினைத்தநிலையில், தொடர்ந்து அது தொடர்வதாக தொடர் செல்கிறது.

ரசிகர்கள் சந்தேகம்
இந்நிலையில் சரஸ்வதி படிக்காத பெண் என்ற உண்மையும் அவருக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அவர் படித்த பெண் என்று நினைத்து தான் இந்த கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் படிக்காத பெண் என்று தெரிந்தால் என்ன நடக்கும் என்ற பதைபதைப்பும் ரசிகர்ளிடையே எழுந்துள்ளது.

திருமணத்திற்கு அழைப்பு
இதனிடையே, தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் மறக்காமல் ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் இணைந்து அவர்களது திருமணத்தில் வாழ்த்த வேண்டும் என்று தமிழும் சரஸ்வதியும் இணைந்து கோரிக்கை வைக்கின்றனர். கல்யாணத்திற்கு ஒன்றிரண்டு நாட்களே உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

நிஜ திருமணத்திற்கு அழைக்காத நக்ஷத்ரா
சமீபத்தில் தனது நிஜ திருமணத்தை முடித்துள்ளார் நக்ஷத்ரா. அந்தக் கல்யாணத்திற்குதான் ரசிகர்களை அழைக்கவில்லை. ஆனால் தற்போது சீரியல் திருமணத்திற்காவது அவர் கூப்பிடுகிறாரே என்று அவரது ரசிகர்கள் முணுமுணுத்தும் அவரை கலாய்த்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











