Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜோதிலட்சுமி மாதிரி நான் 'கச்சிதமாக' இல்லையே... அனுராதா!
தங்கம் தொடரில் சரசரக்கும் பட்டு கட்டி, கழுத்து நிறைய நகை போட்டு எப்பொழுதும் அலங்காரத்துடனேயே இருக்கும் முத்தரசி அத்தையாக வரும் அனுராதா அளித்த சிறப்பு பேட்டி.
கவர்ச்சி நடிகையாக நடித்து விட்டு குடும்ப சூழ்நிலையால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்தேன். பின்னர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தங்கம் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் நடிகர் விஜயகுமாரின் தங்கையாகவும், ரம்யா கிருஷ்ணனின் அத்தையாகவும் நடித்து வருகிறேன்.
இப்பொழுது உள்ள திரைப்படங்களில் கவர்ச்சிப் பாடல்கள் என்று தனியாக இல்லை. கதாநாயகிகளை கவர்ச்சியாக உடை அணிகின்றனர். அவர்களே ஒரு சில குத்துப்பாட்டுக்கு நடனமாடுகின்றனர். அதனால் கவர்ச்சி கதாபாத்திரம் என்று தனியாக ஒன்று தேவையில்லை என்றாகிவிட்டது.
என்னைப் போல என் மகளும் சினிமாவில் கவர்ச்சி நடனமாடவேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவள் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். குவாட்டர் கட்டிங் திரைப்படத்தில் போலீஸ் வேடத்திலும், தெலுங்கு மொழி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இதற்காக நந்தி விருதும் பெற்றிருக்கிறார்.
ஜோதி லட்சுமி போல நீங்கள் ஏன் மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடக்கூடாது என்று நிறைய பேர் என்னிடம் கேட்கின்றனர். ஜோதிலட்சுமி உடம்பை அப்படியே கச்சிதமாக வைத்திருக்கிறார். எனக்கு அப்படி இல்லை. ஆனால் சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தை தக்கவைப்பேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.