Don't Miss!
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்த காரியம்.. கண்ணீர்விட வைத்த பிக்பாஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினை காப்பாற்ற தர்ஷனுக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் வெற லெவலில் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது 92 நாட்களை தொட்டுள்ளது.
இதனால் வரும் நாட்களில் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என்றும் கமல் நேற்றைய எபிசோடில் தெரிவித்தார். தற்போது வரை பிக்பாஸ் வீட்டில், கவின், சாண்டி, ஷெரின், லாஸ்லியா, முகென், தர்ஷன் ஆகிய 6 பேர் மட்டுமே உள்ளனர்.
யாரை காப்பாற்றப்போகிறீர்கள்?
திங்கள் கிழமையான இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் டைரக்ட்டாக யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்பதாக தெரிகிறது.
ஷெரினை காப்பாற்ற வேண்டும்
முதல் புரமோவில் தர்ஷன் கன்ஃபெஷன் ரூமில் உள்ளார். அவரிடம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார் பிக்பாஸ். அதற்கு ஷெரினைதான் யாரும் காப்பாற்ற மாட்டார்கள் அதனால் அவரை காப்பாற்ற விரும்புகிறேன் என்கிறார் தர்ஷன்.
பச்சை மிளகாய்
அதற்கு பிக்பாஸ் நீங்கள் ஷெரினை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரு பச்சை மிளகாயை முழுவதுமாக சாப்பிட வேண்டும் என்கிறார். இதனை கேட்ட தர்ஷன் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பவுலில் இருந்து ஒரு பச்சை மிளகாயை எடுத்து நரநரவென கடித்து சாப்பிடுகிறார்.
மேலும் ஒரு பச்சை மிளகாய்
காரம் தாங்க முடியாத தர்ஷன், ஆ.. ஊ.. என்கிறார். அப்போது நீங்கள் இன்னொருவரையும் காப்பாற்றலாம் என பிக்பாஸ் கூற மேலும் ஒரு பச்சை மிளாகாயை எடுத்து சாப்பிடுகிறார் தர்ஷன்.
டபுள் எவிக்ஷன்
யாரை காப்பாற்ற போகிறீர்கள் என பிக்பாஸ் கேட்க சாண்டி அண்ணாவை என்று கூறுகிறார். இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் அடுத்த வாரம் டபுள் எவிக்ஷனை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.