twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Thenmozhi BA Serial: அருளையும் தேன்மொழியையும் ரூமில் வச்சு.. அட அப்பத்தா!

    |

    சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் கொல்லைப்புரத்தில் ஒரு ரூமில் தங்கி இருக்கா தேன்மொழி. அவ ரூமுக்குள்ளே அருளை போக வச்சு ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு தாழ்ப்பாள் போட்டுட்டாங்க அப்பத்தா.

    அருள் அப்பாவின் பேச்சுக்கு மதிப்புக்கு கொடுத்து, ஊராட்சி மன்றத் தலைவி தேன்மொழியைக் கல்யாணம் செய்துகிட்டான். தேன்மொழி காந்திநகர்க்காரி என்று அருளின் அம்மா வீட்டுக்குள் விடாம கொல்லை புரத்தில் இருக்கும் ஒரு ரூமில் தங்க சொல்றாங்க.

    அருளுக்கு தேன்மொழி மீது ஒரு அபிப்பிராயமும் இல்லை என்றாலும், அவனுக்கு தன் ரேஞ்சுக்கு ஏத்தவள் தேன்மொழி இல்லைன்னு மட்டும் ஒதுங்க நினைக்கிறான். ஆனாலும் தேன்மொழி அருள் மீது ரொம்ப காதல் வச்சு இருக்கா.

    ஹீரோ சார்

    ஹீரோ சார்

    அருள்வேலை ஹீரோ ஹீரோ சார் என்று எப்போதும் தூர நின்னு ரசிச்சவளுக்கு, ஹீரோவே புருஷனா வந்ததும் ரொம்ப சந்தோஷத்துல இருக்கா. இந்த சந்தோஷத்தில் தான் யார், தனக்கு மக்கள் எதுக்காக வாக்கு போட்டாங்க என்பதை எல்லாம் மறந்து சராசரி பெண்ணா அந்த வீட்டில் வாழ்ந்துகிட்டு இருக்கா.

    மதர் இன் லா ஃபாதர் இன் லா

    மதர் இன் லா ஃபாதர் இன் லா

    மதர் இன் லா, ஃபாதர் இன் லா.. சிஸ்டர் இன் லா என்று தகப்பா என்று அப்பாவை கூப்பிடுவது போல வித்தியசமாகத்தான் தேன்மொழி புகுந்த வீட்டில் எல்லாரையும் கூப்பிடுவா. அந்த நகைச்சுவையை இயல்பா எத்தனை சீரியஸான சீன் என்றால் கூட விட்டுக் கொடுக்காமல் தேன்மொழியா நடிச்சு இருப்பார் நடிகை ஜாக்குலின்.

    மின் விசிறி இல்லை

    மின் விசிறி இல்லை

    தேன்மொழிக்கு இரவு 9 மணி ஆனால், கரண்ட் போயிரும். அப்படி மின்சாரத்தை மதர் இன் லா பிடுங்கிருவாங்க. அடுத்து கொசுக்கடியால், இருட்டு அறையில்தான் தூக்கம். மின் விசிறி சுத்தாது. இதெல்லாத்தையும் தன்னை ஹீரோ சார் காதலிக்கிறார் என்கிற நினைவில் பெரிது படுத்தாமல் வாழ்ந்து வருபவள் தேன்மொழி.

    ரூமுக்குள்ள தாழ்ப்பாள்

    ரூமுக்குள்ள தாழ்ப்பாள்

    அருளு.. இதை தேன்மொழிகிட்டே கொஞ்சம் குடுத்துட்டு வான்னு ஒரு தட்டை கொடுத்து தேன்மொழி ரூமுக்கு அனுப்பறாங்க அப்பத்தா. அருளும் அப்பத்தாவின் பேச்சைக் கேட்டுகிட்டு தேன்மொழி ரூமுக்குள்ள போறான். அடுத்த நிமிஷம் அப்பத்தா ரூமை சத்தி தாழ்ப்பாள் போட்டுட்டுட்டாங்க. மாட்டினடா பேராண்டின்னு சொல்லிக்கறாங்க. இருவரும் அங்கு பேசிக்கொண்டு இருக்க, கதவை படாரென்று திறந்த மதர் இன் லா, சிஸ்டர் இன் லா எல்லாரும் அருளின் நெஞ்சில் தேன்மொழி கை வச்சு நிற்பதையும், அருள் அவள் கை மேல் தன கையை வச்சு இருப்பதையும் பார்த்து ஷாக்காகி நிக்கறாங்க.

    English summary
    Arulvelei hero sir hero sir always for a long time, when the hero her husbend she is very happy. The average woman is living in that house, forgetting about the people who are happy and voting for her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X