twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலையில் அடித்துக் கொண்டு அழும் ஐஸ்வர்யா: ஏன் என்னாச்சு?

    By Siva
    |

    சென்னை: இது நான் இல்லை என்று கூறி ஐஸ்வர்யா தனது தலையில் அடித்துக் கொண்டு அழுதுள்ளார்.

    பார்வையாளர்களை ஏமாற்றி வேடிக்கை பார்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளார் பிக் பாஸ். இந்த வாரம் ஐஸ்வர்யாவை காப்பாற்றி பார்வையாளர்களின் ஓட்டுகளை எல்லாம் செல்லா ஓட்டுகளாக்கிவிட்டார்.

    கேட்டால், பார்வையாளர்களாகிய நாம் தான் ஒழுங்காக ஓட்டு போடவில்லை என்கிறார்கள்.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யாவை வெளியேற்ற விரும்பி பார்வையாளர்கள் போட்ட ஓட்டுகளை எல்லாம் காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சா பிக் பாஸ்?. ஆன்லைனில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும் ஐஸ்வர்யாவுக்கு எதிராக தான் அதிகமானோர் வாக்களித்தனர். அப்படி இருக்கும்போது பிக் பாஸுக்கு மட்டும் அது தெரியவில்லை. நாட்டாமை தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு தான் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்திருக்கிறார்.

    வீடியோ

    இது நான் இல்லை. எனக்கு என்னாச்சு என்று கூறி ஐஸ்வர்யா தனது தலையில் அடித்துக் கொண்டு அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யாவுக்கு யாஷிகா ஆறுதல் கூறிய போது அங்கே மும்தாஜ் வந்து மேரி பச்சா என்று பாசம் காட்டுகிறார். உங்களை பிக் பாஸ் காப்பாற்றியதை பார்த்து நாங்க தாம்மா அழணும் ஐஸ்வர்யா.

    எரிச்சல்

    தற்போது எல்லாம் ஐஸ்வர்யா அழுதால் எரிச்சலாக உள்ளது. போதும்மா உன் நீலிக் கண்ணீர் டிராமா. போய் வேறு வேலையை பாரு என்று தான் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அது தான் பிக் பாஸ் காப்பாற்றிவிட்டார் அல்லவா, அதன் பிறகும் ஏன் இந்த நீலிக் கண்ணீர்?

    பாவம்

    இந்த வாரமும் ஐஸ்வர்யாவை நீலிக் கண்ணீர் விட வைத்து மக்களின் பரிதாப ஓட்டுகளை பெற திட்டமிட்டுள்ளார் பிக் பாஸ். பிக் பாஸ் குசும்புக்காரர், ஐஸ்வர்யாவை டை்டில் வின்னர் ஆக்கப் பார்க்கிறார்.

    English summary
    Bigg Boss 2 Tamil contestant Aishwarya is seen crying in the smoking room in a promo video released today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X