பிக்பாஸ் வீட்டுக்குள்ள இன்னைக்கு யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு பாருங்க.. ஒரே ஆட்டம் பாட்டம் தான்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 99வது நாளை எட்டியிருக்கிறது. நாளையுடன் 100வது நாள் முடிகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள 4 பேர் ஃபைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.
முகென் ஏற்கனவே கோல்டன் டிக்கெட் பெற்று டைரக்ட்டாக ஃபைனல்ஸ்க்கு தேர்வாகிவிட்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியே மூன்று பேர் ஃபைனலுக்கு தேர்வாகியுள்ளனர்.

பழைய போட்டியாளர்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்று வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது காட்டப்பட்டுள்ளது.

கட்டிப்பிடித்து
அதன்படி மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, ரேஷ்மா, மீரா மிதுன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அவர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள நான்கு போட்டியாளர்களையும் கட்டிப்பிடித்து ஆரத்தழுவினர்.

கிஃப்ட், டிரெஸ்
பிக்பாஸ் வீட்டில் உள்ள நான்கு பேருக்கும் சாப்பாடு, உடை, கிஃப்ட் என கொண்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் உள்ள நான்கு பேருடன் சேர்ந்து ஆட்டம்போட்டு கொண்டாடுகின்றனர்.

கொடுக்கறதில்லையா?
தொடர்ந்து முகெனை பார்த்த ரேஷ்மா, என் பையனுக்கு சாப்பாடு கொடுப்பதில்லையா, என் பையன் இளைச்சு போயிட்டான் என்று கூறுகிறார். இப்படியாக முடிகிறது இன்றைய முதல் புரமோ.


Click it and Unblock the Notifications











