Don't Miss!
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சீரியலில் நடிக்கும்போதே காதல்... - திருமணத்தில் இணையும் அடுத்த ஜோடி!
சென்னை : சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'பிரியமானவள்' என்ற சீரியல் ரசிகர்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நட்ராஜ் - அவந்திகா ஜோடியின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
இவர்களின் உண்மையான பெயர் விஜய் - சிவரஞ்சனி. கணவன்-மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர்களுக்கு உண்மையிலேயே காதல் ஏற்பட்டுவிட்டது.
ஒருவர் மீது ஒருவர் நல்ல புரிதலுடன் காதல் கொண்டுள்ளனர். முதலில் சிவரஞ்சனியே தனது காதலை விஜய்யிடம் தெரிவித்திருக்கிறார். விஜய்யும் அதை ஏற்றுக்கொண்டார்.
இருவர் வீட்டிலும் சம்மதம் சொல்ல, விரைவில் திருமணத்தையும் நிச்சயித்திருக்கின்றனர். இவர்களது திருமணம் அக்டோபர் 30-ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பே, 'சரவணன் மீனாட்சி' சீரியலில் காதல் கணவன் மனைவியாக நடித்த செந்தில் - ஶ்ரீஜா உள்பட இப்படி சில சீரியல் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.