நள்ளிரவில் பேய்களை தேடி அலையும் மணிமேகலை... !
சென்னை: சினிமாவோ, சீரியலோ அனைத்திலும் பேய்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. பேய்கதைகளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து சன் மியூசிக் சேனலில் 'பிளாக்' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர். தொகுப்பாளினி மணிமேகலைதான் பேய்களைத் தேடி திகில் பங்களாக்களுக்கு பயணம் செய்கிறார்.
என்னதான் பேய்களைத் தேடி போனாலும் நள்ளிரவில் நடக்கும் படப்பிடிப்பில் அஞ்சி, அழுது நடுங்குகிறார். இதெல்லாம் ஓவர் ஆக்டிங் என்று ஒரு சிலர் சொன்னாலும், இல்லை, இல்லை நிஜம்தான் என்கிறார் மணிமேகலை.

பேய் பங்களா
இந்த தொடர் ஒரு வித்தியாசமான முயற்சி. சென்னை யில் மட்டுமில்லாமல் கொடைக்கானலிலும் திகில் பகுதி என்று நம்பப்படும் இடங்களுக்கு சென்று ஷூட் செய்கிறோம்.

பேய்களைத் தேடி
பேய் பங்களாக்கள் என்று நம்பப்படும் இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்துகிறோம். மொத்தத்தில் இது பேய் களைத் தேடும் ஒரு பயணமாக இருக்கிறது.

கோவாவில் படப்பிடிப்பு
ஒரு குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்ட, 20 ஆண்டுகளாக யாருமே எட்டிப்பார்க்காத வீட்டில் படப்பிடிப்பு நடக்கும் போது நடுங்கித்தான் போனாரம். துணைக்கு படப்பிடிப்புக்குழுவினர் இருப்பதால் பயமின்றி நடிக்கிறாராம்.

கோவாவில் சூட்டிங்
சென்னை, கொடைக்கானல் பேய்களை மட்டுமே தேடி வந்த மணிமேகலை இனி கோவாவில் உள்ள பேய்களைத் தேடிப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











