Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோலி சோடாவுக்கு போட்டி போடும் டிவி சேனல்கள்...
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கோலி சோடா' படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பினை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார் இயக்குநர்.
தியேட்டர்களில் கோலிசோடா படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பினை அடுத்து படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற டிவி சேனல்களிடையை பெருமளவில் போட்டி உருவாகியுள்ளதாம்.
பசங்க பிரபலம்
'பசங்க' படத்தில் நடித்த ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடிக்க, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் 'கோலி சோடா'. 24ம் தேதி இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.
கோயம்பேடு கதை
கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஹோட்டலை நடத்தும் நாலு விடலை பசங்களைச் சுற்றி நகரும் கதைதான் கோலி சோடா. கதை எளிமையானதுதான் என்றாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துவிட்டது. காரணம் திரைக்கதையும், பசங்க பாண்டிராஜின் நடிகர்களின் தேர்வும் தானாம்.
நடிகர்கள் சந்திப்பு
கோலி சோடா படம் தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் குழுவினர் வியாழக்கிழமை இரவு ஸ்ரீனிவாசா, ஆனூர் அபிராமி திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.
ரசிகர்கள் வரவேற்பு
நடிகர்களை பார்த்ததும் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு நடிகர்கள் நன்றி தெரிவித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர்.
கோலி சோடா பார்ட் 2
ரசிகர்களிடம் பேசிய இயக்குநர் விஜய்மில்டன், ‘‘இதே நடிகர் குழுவினரை வைத்து கோலி சோடா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த நடிகர்களை எனது கதைக்கு தேர்வு செய்த இயக்குனர் பாண்டிராஜ்-க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இளம் நடிகர்கள்
கோலிசோடாவில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட நடிகர்கள்தான் நடித்துள்ளனர். இது குழந்தைகளுக்கான படம். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி தயாரித்துள்ள இப்படத்திற்க பசங்க பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார்.