உள்ளம் கொள்ளை போகுதடா! பாலிமர் டிவியில் காதல் தொடர்

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் ஒரு ரொமான்டிக் நெடுந்தொடர். தலைப்பே கவிதையாய் அமைந்திருப்பதைப்போல கதையும் காதல் கதைதான் என்கின்றனர் இந்த தொடர் தயாரிப்பாளர்கள்.
காதலித்து திருமணம் செய்வது ஒருவகை, திருமணம் செய்து கொண்டு காதலிப்பது காலத்தை வென்ற காவியமாக்கும். இளமைக் காலம் முழுவதும் தன் குடும்பத்திற்காக உழைத்த ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது ஏற்படும் மாற்றங்களை எதார்த்தமாக பதிவு செய்திருக்கின்றனராம்.
இந்தத் தொடருக்கான பாடலை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். ஸ்வேதா மேனன் பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











