Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி
Recommended Video
சென்னை:பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்துவிட்டு சென்றார் வைஷ்ணவி.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து நேற்று வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். ஐஸ்வர்யா வெளியே சென்றிருந்தால் பார்வையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராக செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிக் பாஸ்.
வைஷ்ணவி
வெளியே போக வேண்டாம். போனால் மிகவும் வருத்தமாக இருக்கும். நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் அது முடியவில்லை. வந்ததற்கு ஜெயித்துவிட்டு போக வேண்டும் என்று ஆசை இருக்கு என்று கமல் ஹாஸனிடம் கூறிய வைஷ்ணவி தான் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது முறை வாய்ப்பு கொடுத்ததை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
கன்ஃபெஷன் அறை
வைஷ்ணவி தான் வெளியேற்றப்படுகிறார் என்பதை நேரடியாக கூறாமல் அவரை கன்ஃபெஷன் அறைக்கும், சென்றாயனை ஸ்டோர் ரூமுக்கும் அனுப்பி வைத்தார் கமல். போட்டியாளர்களோ ஒரு வேளை டபுள் எவிக்ஷனாக இருக்குமோ என்று பேசத் துவங்கிவிட்டனர். இல்லை என்றால் ஒயில்டு கார்டு மூலம் யாராவது வருகிறார்களோ என்று போட்டியாளர்கள் குழம்பினார்கள்.
போட்டியாளர்கள்
5 நிமிடம் கொடுத்தால் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிவேன் என்றீர்கள். அதை தற்போது செய்து காட்டுங்கள் என்று கமல் கூற வைஷ்ணவியும் அப்படியே செய்தார். ஐஸ்வர்யா உனக்கு கோபம் தான் பிரச்சனை, உனக்கு நீயே பிரச்சனை செய்கிறாய். டேனி நீ நேரடியாக பேசாமல் இருப்பது மற்றவர்களை காயப்படுத்துகிறது. சென்றாயன் எதையுமே காதில் வாங்குவது இல்லை. யாஷிகா ஜெயிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார். ரித்விகா முழுக்கதையை தெரியாமல் பேசுவதை நிறுத்த வேண்டும். மும்தாஜ் தனக்கு ஏதுவானதை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார் என்றார் வைஷ்ணவி.
|
தந்தை
வைஷ்ணவியின் பெற்றோர் மேடைக்கு வந்தனர். அவரின் தந்தை ஏதோ பேச முயன்றார். ஆனால் கமல் அதை கண்டுகொள்ளாமல் அவரை அனுப்பி வைத்துவிட்டார். வைஷ்ணவியின் பெற்றோரை கமல் நடத்திய விதம் சரியில்லை என்று நெட்டிசன்கள் புகார் தெரிவித்துள்ளனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?
பிரச்சனை
ரகசிய அறைக்கு செல்லும் முன்பு வைஷ்ணவி பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்து கொண்டே இருந்தார், புறம் பேசினார். ரகசிய அறையில் இருந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டார். அந்த காரணத்தால் தான் அவர் வெளியேற்றப்பட்டிருக்கக்கூடும்.