Don't Miss!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- News ஆச்சரியம்.. உடனே வெளியே போய் பாருங்க.. 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழாது
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் அழுவது மகனுக்குப் பிடிக்காது…. வள்ளி கதாநாயகி உமா
சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்து வெற்றி பெற்றவர் நடிகை உமா. சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும், திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி சீரியல் மட்டுமே போதும் என்று நடித்து வருகிறார்.
இப்போது மகனுக்காக சீரியல் சூட்டிங் கூட 10 நாட்கள் மட்டும்தானாம். அப்புறம் பெங்களூரில் உள்ள மகனுடன் கொஞ்சி விளையாடுகிறார். தன்னுடைய சின்னத்திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.
சினிமாவில் நடிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. அதோடு சினிமாவிற்கு பை சொல்லிவிட்டு செட்டில் ஆகிவிட்டேன். அப்போதுதான் கன்னட சீரியல் வாய்ப்பு வந்தது.
கன்னட சித்தி நான்
தமிழில் ராதிகா நடித்த 'சித்தி' சீரியலோட கன்னட ரீமேக் 'சிக்கம்மா' சீரியலில் 5 ஆண்டுகள் நடித்தேன். அங்க சூப்பர் ஹிட்டா ஓடிட்டிருந்த அந்த சீரியல், நாலு மாசத்துக்கு முன்னதான் முடிஞ்சது.
வள்ளியில் வாய்ப்பு
அதன் மூலமாகத்தான் வள்ளி வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்ட வாழ்க்கையில எதிர்கொள்கிற, சாதிக்க நினைக்கிற கதைதான் 'வள்ளி' சீரியல். நேயர்கள்கிட்ட வள்ளி கேரக்டருக்கு நல்ல பெயரும் பாராட்டும் கிடைச்சிருக்கு.
ரசிகர்கள் ஏராளம்
'வள்ளி'க்கு ஏற்படுற பிரச்னைகளை பார்த்துட்டு, பலரும் நிஜ வாழ்க்கையில் நடக்குற மாதிரியே இருக்குனு போன்ல கலக்கத்தோட பேசுவாங்க. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த சரிகம நிறுவனத்திற்கு நன்றி.
அம்மா செல்லம் நான்
பெங்களூருவுல எங்க வீட்டுக்கு மூணு வீடு தள்ளிதான் அம்மா சுமித்ரா வீடு இருக்கு. நினைச்சப்போ எல்லாம் ஓடிடுவேன். கணவர் துஷ்யந்த் ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார். நாலு வயது மகன் மாத்விக், வர்ற வருஷம் ஜூனியர் கே.ஜி போறான்.
நான் அழுவது பிடிக்காது
சீரியல்ல நான் அழறதைப் பார்த்துட்டா, அவனுக்கும் அழுகை வந்துடும். அவனுக்காக இப்போ மாசத்துல 10 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் ஒப்புக்கிறேன். அதுக்கு மேல நோ!''என்று சொல்லிவிட்டு சூட்டிங்கிற்கு ரெடி ஆனார்.