twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யதார்த்தங்களின் திகில்..சுவாரஸ்யம் கலந்த ..“வந்தது நீயா” தொடர் அசத்தும் கலர்ஸ் தமிழ் !

    |

    சென்னை: ஏப்ரல் 3 முதல், ஆரம்பமாகும் "வந்தது நீயா"தொடர் , திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ,இதன் புராதன, வியப்பூட்டும் ஃபேண்டஸி கதை தொடர்களுக்காக குறிப்பாக, பெரும் வெற்றி பெற்ற நாகினி நெடுந்தொடருக்காக இலட்சக்கணக்கான ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.

    அந்த ஹீரோவுக்கு பாடி கார்டாக இருக்க விரும்புகிறேன்... நடிகை ரஷ்மிகா மந்தனா! அந்த ஹீரோவுக்கு பாடி கார்டாக இருக்க விரும்புகிறேன்... நடிகை ரஷ்மிகா மந்தனா!

    இந்த அலைவரிசை, நாகினி 5-ன் தொடர் நிகழ்வாக வந்தது நீயா நெடுந்தொடரை தொடங்குவதன் மூலம் இதனை இன்னும் அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறது.

    ஏக்தா கபூர் தயாரிப்பு

    ஏக்தா கபூர் தயாரிப்பு

    பாலாஜி டெலிஃபிலிம்சின் ,ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளிவரும் வந்தது நீயா தொடர், நாகினியின் அபூர்வமான உலகத்தை நமக்கு மீண்டும் உயிரோட்டமாக வழங்கவிருக்கிறது. என்றும் நிலைத்து நீடிக்கும் அதிசக்தி வாய்ந்த நபர்களுக்கிடையிலான காதலையும், ரொமான்ஸையும் இது சுவைபட சித்தரிக்கிறது.

    திடுக்கிடும் நிகழ்வுகள்

    திடுக்கிடும் நிகழ்வுகள்

    மசோரி என்ற நவீன நகரத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வுகள் இதற்கு முன்பு பார்த்திராக அளவுக்கு அதிக மர்மத்தையும், திடுக்கிடும் நிகழ்வுகளையும், அற்புதமான கதை பின்னணியையும் கொண்டு பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்வது நிச்சயம். 2021 ஏப்ரல் 3 ஆம் தேதி, தொடங்குகின்ற "வந்தது நீயா" நெடுந்தொடரானது, கலர்ஸ் தமிழில் ஒவ்வொரு வாரமும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

    அழிவும் சாபமும்

    அழிவும் சாபமும்

    நாகினி மற்றும் கழுகிற்கு இடையே நடைபெறும் ஒரு விரும்பத்தகாத திருமணத்திற்குப் பிறகு இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியாக அளவற்ற சக்தியினை கொண்டிருக்கும் ரேஹன் சிங்காரம் (ஹர்ஷ் ராஜ்புத் நடிப்பில்) என்ற குழந்தை அவர்களுக்குப் பிறக்குமாறு சபிக்கப்படுகின்றனர். இவனைச் சுற்றி கலகமும், குழப்பமும், அழிவும் ஏற்படும் என்ற சாபமும் ஆட்டிப்படைக்கிறது.

    கையாளும் யுக்தி

    கையாளும் யுக்தி

    அவனது சக்தியின் மூல ஆதாரத்தை அடையாளம் காண முயற்சிக்கும் ரேஹன், அவனது வாழ்க்கையில் பாதி தேவதை மற்றும் பாதி மானுட நபராக திகழும் பிரியா (கிருஷ்ணா முகர்ஜி நடிப்பில்) சந்திக்க நேரிடுகிறது. எனினும், அவளது ஆற்றல் பற்றி அறியாதவனாகவே ரேஹன் இருக்கிறான். தங்களது சக்தியின் பின்னாலுள்ள ரகசியத்தை கண்டறிவதற்காக அவர்களது உறவின் துரதிருஷ்டவசமான அம்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஒரு யுத்தத்தில் அவர்கள் இருவரும் ஈடுபடுகின்றனர். ஒருவர் மற்றொருவரிடமிருந்து பிரிந்து செல்லுமாறு அவர்களை செய்கின்ற வரலாறு திரும்பவும் நிகழுமா? அல்லது ஒருவர் மற்றொருவரோடு இன்னும் மிக நெருக்கமாக அவர்கள் வருவதற்கு அது உதவுமா?

    கண்ணுக்கு விருந்து

    கண்ணுக்கு விருந்து

    வியப்பூட்டும் இந்த உலகம் நம் கண்களுக்கு முன்னே கண்டு மகிழ ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையிலிருந்து தொடங்கி சனிக்கிழமை வரை மாலை 6.30 வரை ஒளிபரப்பாகும் வந்தது நீயா நெடுந்தொடரை மறவாமல் கண்டு ரசியுங்கள் .

    English summary
    Vandhathu neeya is the new programme in Colors TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X