Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Bigg Boss 3 Tamil: செம கேப்டனப்பா.. கலக்கிட்டாரே வனிதா விஜயகுமார்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ் மேடாக தங்கி இருக்கும் வனிதா விஜயகுமார் நல்ல கேப்டன் என்று மீரா தவிர எல்லாரிடமும் நல்ல பேர் வாங்கி இருக்கார்.
குரல்தான் அப்பா நாட்டாமையோட குரல் என்றாலும், வனிதா மனசு என்ன நினைக்குதோ அது படி செயல்படறார். மனசு என்றாலே மனசாட்சின்னுதான் அர்த்தம். மனசாட்சிக்கு விரோதம் செய்யாம நடந்துக்கறார்.
இவரை ஏதாவது சலசலப்புக்கு உள்ளாக்கும் மாதிரி சூழ்நிலைகள் மாறி சென்றாலும், தன் டிராக் மாறாமல் அப்படியே இருக்கிறார் ,நியாயப்படி நடந்துக்கறார்.
குழந்தை பருவத்தில் வனிதா
வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மூவரும் பிறக்கும் வரை, வளசர வாக்கத்தில், இப்போது இருக்கும் பெரிய பங்களா கட்டப்பட்ட வில்லை. அதனால், இவர்களுக்கு போதுமான ஒரு சின்ன பங்களாவில்தான் குழந்தைகள் வளர்ந்து இருக்காங்க. பெண் குழந்தைகள் மூவரும் ஆயாம்மாவின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். காலையில் அம்மா,அப்பா ஷூட்டிங் எப்போது போவார்கள் என்றும் தெரியாது.இரவு எப்போது வீடு திரும்புவார்கள் என்றும் தெரியாது.
விஜயகுமார் மஞ்சுளா வீட்டில்
விஜயகுமார் மஞ்சுளா இருவரும் வீட்டில் இருக்கும் நேரங்களில் வீடே அதகளப்படுமாம். வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி மூன்று குழந்தைகளும் அத்தனை சந்தோஷத்தில் குதூகலிப்பார்களாம். அப்பா அம்மாவை ரெஸ்ட் எடுக்க விட மாட்டார்கள். என்றாலும் கூட பிள்ளைகளிடம் அம்மா மஞ்சுளா கோபம் காமிக்கவே மாட்டாராம். எந்த சண்டையாக இருந்தாலும், அம்மா அப்பாவுக்குள் வரும் எந்த சண்டையும் அப்படியே அவர்களுக்குள் குழந்தைகளுக்குத் தெரியாமல் முடிந்துவிடுமாம்.
பிள்ளைகளுக்கும் டாடி
மஞ்சுளா காதலித்து விஜயகுமாரை கல்யாணம் செய்துகொண்டாலும், அவரை அதுவரை வாங்க, போங்கன்னு மட்டுமே அழைத்துக்கொண்டு இருந்தாராம். வனிதா பிறந்து பேச ஆரம்பித்து, அப்பாவை டாடி என்று அழைத்த உடனே, தானும் கணவரை டாடி என்று செல்லமாக அழைப்பாராம். அன்று முதல் வனிதாவின் அம்மாவுக்கும், விஜயகுமார் டாடி ஆனார்.
அதோடு சரி
குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்த மஞ்சுளா,விஜயகுமார் தம்பதியர், அடுத்து குழந்தைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை.காரணம், பிள்ளைகள் அதற்கு மேல் படிக்காமல் நடிக்க ஆசைப்பட்டார்களா ,இல்லை வாய்ப்பு வந்ததும் நடிக்க வைத்துவிட்டார்களா என்று விவரம் தெரியவில்லை.
ஸ்ரீதேவி வனிதா
வனிதா சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மிகச் சிறிய வயதிலேயே நடிக்க ஆரம்பிச்சார். அதற்குப் பிறகு வயதில் மிகப் பெரியவரான ராஜ்கிரணுடன் மாணிக்கம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்போது இந்த சின்ன பெண்ணிடம் பல பத்திரிகையாளர்கள் எதற்கு இந்த வயதில்லை ராஜ்கிரணுடன் என்று கேட்டபோது, நடிப்புன்னு வந்தாச்சு..இதில் இந்த ஹீரோவா அந்த ஹீரோவா என்று பாகுபாடு எதுக்கு. அதுவும் இல்லாமல் ராஜ்கிரண் பல வெற்றி படங்களைத் தந்தவர் என்று அதிரடி பதில் கொடுத்தவர். இவரின் இரண்டாவது தங்கை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகவும் நடித்தவர்.
பங்களா வளசரவாக்கம்
பிள்ளைகள் அதுவும் வனிதா நடிக்க ஆரம்பித்த பிறகு மஞ்சுளா விஜய்குமார் தம்பதியர் கட்ட ஆரம்பித்ததுதான் வளசரவாக்கம் பெரிய பங்களா. இப்போது இந்த பங்களாவின் வனிதா வசிச்சதுதான் அவரது இரு தங்கைகளைத் தவிர இப்போதுள்ள அவர்கள் வீட்டார் யாருக்கும் பிடிக்காமல் அண்மையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
பிள்ளைகள் இருந்தாலும்
ஒரு தாய்க்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அத்தனை பிள்ளைகளும் தன்னுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாள். வளர்ந்துவிட்ட தனது மூத்த மகன் தன்னிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்சசிக்கு வந்ததைக் கூறுகிறார் வனிதா. என்னதான் வாயாடினாலும் குரைக்கற நாய் கடிக்காது என்பது போலத்தான் வனிதாவின் குணம்.
ஒருவரிடம் இருக்கும் குறையை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காமல், அதே பூத கண்ணாடியை வைத்து அவரிடம் இருக்கும் நல்லதை பார்த்து, குடும்பத்தினர் அவரை அரவணைக்கலாமே! தங்கைகள் இருவரை இன்னொரு தாயாக இருந்து பார்த்து அரவணைத்துக் கொண்டவர் வனிதா.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!