Don't Miss!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கஸ்தூரி தும்மல்.. அண்ட புளுகு புளுகிய வனிதா! இன்னும் திருந்தவே இல்ல போல!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் கஸ்தூரி தும்மியது குறித்து கூறிய பொய் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்தார் கஸ்தூரி. அவரை தொடர்ந்து வனிதாவை விருந்தாளியாக அழைத்து, வைல்டு கார்டு என்ட்ரியாக அறிவித்தார் பிக்பாஸ்.
வனிதா வந்த நாள் முதல் பிக்பாஸ் வீடு ரணகளமாகியுள்ளது. பிக்பாஸ் வீடு என்னவோ தனது சொந்த வீடு என்பது போல் அதிகாரம் செலுத்தி வருகிறார் வனிதா.
எதுக்காக வந்தீங்க?
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி வந்தது வனிதாவுக்கு பிடிக்கவில்லை. வனிதா வந்தது முதல் கஸ்தூரியை நீங்க எதுக்காக வந்தீங்க என்று கேட்டு வெறுப்பேற்றி வருகிறார்.
காத்ததிருக்கும் வனிதா
இந்நிலையில் பள்ளிக்கூட டாஸ்க்கின் போது வனிதாவை வாத்து என்று கூறிவிட்டதாக கஸ்தூரி மீது கொலை வெறியில் உள்ளார் வனிதா. எப்போது வாய்ப்பு கிடைக்கும், அவரை வாங்கலாம் என காத்திருக்கிறார் வனிதா.
சரியான முறை
இந்நிலையில் நேற்று கிச்சனில் பூண்டு உரித்த கஸ்தூரி தும்மல் வந்ததால் தூரமாக சென்று, கையில் படாதபடி சரியான முறையிலேயே தும்மினார். பின்னர் மீண்டும் பணியை தொடங்கினார் கஸ்தூரி.
மாற்றி பேசிய வனிதா
இவை முழுவதையும் பார்த்த வனிதா, வேண்டுமென்றே தும்மினால் கையை கழுவுங்கள் என்று கூறுகிறார். ஆனால் கஸ்தூரி நான் கையை பயன்படுத்தவேயில்லை என்றார். உடனே ஹைஜீனிக்கு அப்படி இப்படி என்று கத்திய வனிதா, வெளியே சென்று அப்படியே மாற்றி பேசினார்.
சமைக்க மாட்டேன்
அதாவது கஸ்தூரி அப்படியே தும்மிவிட்டு அப்படியே சமைப்பதாக கூறி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை டிவிஸ்ட் செய்கிறார். மேலும் கஸ்தூரி கிச்சனில் இருந்தால் நான் சமைக்க மாட்டேன் என்றும் அவர் கூறி பிரச்சனையை பெரிதுபடுத்துகிறார்.
|
திருந்தவே இல்லை
இதனை பார்த்த பார்வையாளர்கள் வனிதா கஸ்தூரியை கார்னர் செய்து விரட்ட பார்க்கிறார் என்றும் இன்னும் திருந்தவே இல்லை பொய் சொல்லி சண்டை மூட்டி விடுகிறார் என்றும் திட்டி வருகின்றனர்.
|
கரண்டியை நக்கிய வனிதா
நினைவிருக்கிறது வனிதா கறி தயாரிக்கும் போது கரண்டியை நக்கி அதே கரண்டியை மீண்டும் கறியில் வைத்தாள். அப்படியானால் வனிதா எப்படி அதிக சுகாதாரமானவர் ?? கஸ்தூரியைப் பார்க்கும்போதெல்லாம் வனிதாவுக்கு கடுப்பு ஆகிறது. வேண்டுமென்றே சீனை ஏற்படுத்த விரும்புகிறாள் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
|
சீன் போடும் வனிதா
கஸ்தூரி தும்மியது குறித்து வனிதா ஷெரினிடம் கூறியது முற்றிலும் தவறானது. வனிதா சீன் கிரியேட் செய்கிறாள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.