களைகட்டும் பிக்பாஸ்.. சாக்ஷி உன்னாலதான் வெளியே போனா.. கவினை கிழித்து தொங்கவிட்ட வனிதா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கவினை வனிதா கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெருக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு என நாட்டுப்புற கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை.
இந்நிலையில் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட முடிவு செய்த பிக்பாஸ், இன்று ஓபன் நாமினேஷனை அரங்கேற்றி சிண்டுமுடித்துவிட்டுள்ளார். ஓபன் நாமினேஷனால் பிக்பாஸ் வீடு பற்றி எரிகிறது.

கடுப்பான வனிதா
கவினும் சாண்டியும் அழுது பரிதாபத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். குறிப்பாக கவின் அழுதே அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார். இதனால் கடுப்பான வனிதா, விளையாட்டை விளையாட்டா பாருங்க என முதல் புரமோவிலேயே கூறினார்.

கிழித்து தொங்கவிட்ட வனிதா
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீடு ரணகளமாகிவிட்டது போல. தற்போது மூன்றாவது புரமோவும் வெளியாகியுள்ளது. அதில் கவினை கிழித்து தொங்கவிட்டுள்ளார் வனிதா.

சாக்ஷி ஃபைனல்ஸ்
அழுது சிம்பத்தியை பெற முயன்ற கவினிடம், இத்தனை வாரம் உன்னை மக்கள் காப்பாற்றினார்கள் இல்லையா, உனக்கு பதில் சாக்ஷியை காப்பாற்றியிருந்தால் அவள் ஃபைனல்ஸ்க்கு போயிருப்பா.

அதுக்கு என்ன பதில்?
உன்னால அவ வெளியே போயிட்டா. அதுக்கு என்ன பதில் சொல்லப் போற? என்று கேட்கிறார் வனிதா. அதற்கு பதில் சொல்லும் கவின், நான்தான் நேத்தே சொன்னேனே இப்போவே கதவை திறங்க நான் வெளியே போறேன் என்கிறார்.

கடுமையான வாக்குவாதம்
அதற்கு சாக்ஷியை உள்ளே கொண்டுவந்து விட்டுவிட்டு நீ வெளியே போ என்கிறார் வனிதா. இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது.

யார் தப்பு யார் சரி?
இரண்டாவது முறையாக உள்ளே வந்திருக்கீங்க என்பதால் நீங்கள் செய்வது எல்லாம் சரி என்று ஆகிவிடாது என்று மல்லுக்கட்டுகிறார் கவின். அதற்கெல்லாம் அசராத வனிதா, யார் சரி யார் தப்பு என்று பேசவரவில்லை என்கிறார்.

சிம்பத்தியை கிரியேட் பண்றது தப்பு
மேலும் மத்தவங்கள இன்ஃபுலயன்ஸ் பண்றது தப்பு, அழுது சிம்பத்தியை கிரியேட் பண்றது தப்பு. இது அதுக்கான ஸ்டேஜ் கிடையாது என்று கத்தி கவினை ஒரு வழியாக்கிவிடுகிறார் வனிதா.


Click it and Unblock the Notifications











