Don't Miss!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நீ கேப்டனா இருக்கவே லாயக்கு இல்லை.. பொறாமையில் அபிராமியை பொறிந்து தள்ளிய வனிதா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாக தேர்வாகியுள்ள அபிராமியுடன் வனிதா மல்லுக்கு நின்ற சம்பவம் பிக்பாஸ் வீட்டினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் புதிதாக ஒருவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படுகிறது. அதன்படி ஃபாத்திமா பாபுவால் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேருக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்தார்.
அதாவது, ஒரு பெல்ட்டில் உள்ள மூன்று ஹுக்குகளை சாண்டி, தர்ஷன், அபிராமி ஆகியோர் தங்களின் பேன்ட் லூப்பில் அந்த பெல்ட்டை மாட்டிக்கொண்டு நடக்க வேண்டும். இதில் யார் முதலில் லூப்பை கழற்றி விடுகிறார்களோ அவர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக அர்த்தம்.
Bigg Boss 3 அய்யய்யோ யாராவது லாஸ்லியாவை காப்பாத்துங்க: கதறும் ரசிகர்கள்
விட்டுக்கொடுத்த தர்ஷன்
இதைத்தொடர்ந்து சாண்டி லூப்பை கழட்டிவிட்டு போட்டியிலிருந்து விலகினார். பின்னர் அபிராமி தர்ஷன் இருவரும் பேசி யாராவது ஒருவர் தலைவராக முடிவு செய்யுங்கள் என்றார் பிக்பாஸ். இதையடுத்து தர்ஷன் லூப்பை கழட்டி விட்டு அபிராமிக்கு எதிராக சிலர் உள்ளனர். அதனால் அபிராமி தலைவராகட்டும் என்று கூறி விட்டுக்கொடுத்தார்.
ஈயாடவில்லை
அபிராமி தலைவரானது அவரது கேங்குக்கே பிடிக்கவில்லை. குறிப்பாக வனிதா, சாக்ஷிக்கு பிடிக்கவில்லை. அபிராமி கேப்டன் ஆன பிறகு அவர்களின் முகத்தில் ஈயாடவில்லை. கேப்டனான அபிராமி, மதுமிதாவுடனான பிரச்சனையை தீர்க்க முயற்சித்தார்.
ஆப்பாக அமைந்த பேச்சு
ஆனால் மதுமிதா மக்கள் கிளாரிஃபை செய்து விட்டார்கள் அதைப்பற்றி பேச வேண்டாம் என கூறியும், அபிராமி வலுக்கட்டாயமாக அந்த பிரச்சனை எடுத்தார். மேலும் பர்சனலாக பேசியதை பொதுவெளியில் தனது கேங்கிடம் கூறினார் அபிராமி. அதுவே அவருக்கு ஆப்பாக அமைந்தது.
நான் விவாதிக்க வேண்டும்
இதுதான் சமயம் என மதுமிதா பேசினால் நீ எப்படி கேட்டுவிட்டு இங்கு வந்து கேட்பாய் என குதிக்க தொடங்கினார் வனிதா. மதுமிதாவை இங்கு அழைத்து வா, அவள் என்ன கூறினால் என்பதை குறித்து நான் விவாதிக்க வேண்டும் என்றும் கத்தினார் வனிதா.
அப்போ என்ன மார்க்கெட்?
வனிதா கத்தியதை பொறுக்க முடியாத அபிராமி இது என்ன மீன் மார்க்கெட்டா இப்படி கத்துகிறீர்கள் என்றார். அவ்வளவுதான் ஆட ஆரம்பித்து விட்டார் வனிதா. நீ எப்படி மீன் மார்க்கெட் என்று கூறலாம்? அன்று உனக்காக கத்தினோமே அப்போ என்ன மார்க்கெட்?
லாயக்கு இல்லை
நீ கேப்டனாக இருக்கவே லாயக்கு இல்லை, நீ ஸ்டெடி மைன்டிலும் இல்லை, எனவே தான் நீ கேப்டனாகக் கூடாது என்று நான் கையை தூக்கவில்லை. என சரமாரியாக அபிராமியை பொறிந்து தள்ளினார் வனிதா. இதனால் பிக்பாஸ் வீடு ரணகளம் ஆனது.