ரொம்ப நாளா ஆசை.. ஒரு வழியா நிறைவேத்திட்டேன்.. செம கூல் வனிதா
சென்னை: தான் ரொம்ப நாளா ஆசைப்பட்டது செய்யதுக்கு பயமாக இருந்ததால் தன் மகளை அதில் ஏற்றி விட்டேன் என கூலாக சிரித்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார் வனிதா.
வனிதா எனும் பெயரைக் கேட்டாலே பலருக்கு ஞாபகத்திற்கு வருவது சர்ச்சைகளின் இளவரசி என தான். அதற்கேற்பத்தான் எல்லாமே அவருக்கு அமைகிறது.
அதிலேயும் தற்போது காதல் திருமணங்களில் அதிகமாக வைரலாகி வந்த இவர் தற்போது தனது மகளை வைத்து இவர் வெளியிட்ட வீடியோ பெரும் வைரலாக பரவி வருகிறது.

வனிதா விஜயக்குமார்
வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து பிரபலமாதைவிடவும் தற்போது சீரியல்களிலும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது வாழ்க்கையை தான் தான் வாழவேண்டும் என எல்லோரை விடவும் வித்தியாசமாக இருந்து இருந்து வருகிறார்.

இப்படித்தான் நான்
பல நெட்டிசன்கள் இவரை வைத்து கலாய்த்து இவர் ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார் என்று சொன்னாலும் அது மறுப்பதற்கு இல்லை .அந்த மாதிரி தான் தற்போது அவர் வெளியிட்ட வீடியோஸ் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரை வேறுவிதமாக காட்டி இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூட உருவாகிறது.
அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தான் இவரது வேலையாக இருந்து இருந்து வருகிறது.

புதுப் புது காதல்
திடீரென நான்காவது ஒருவரை காதலிக்கிறேன் என இவர் போட்ட டுட்வீட் பெரும் வைரலாகி வந்த நிலையில் அவருடைய காதல் திருமணம் முதல் அவரை வெளியேற்றியது வரைக்கும் ரொம்பவே சமூகவலைத்தளங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இவரது பெயர்தான் ஒலித்துக்கொண்டிருந்தது. அதுபோல தற்போது கொஞ்ச நாட்கள் இவரது பெயர் அடிபடாமல் இருந்தாலும் மீண்டும் ஐந்தாவது கணவர் யார் என ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கு போது இவர் வெளியிட்ட யூடியூப் வீடியோவும் ரொம்பவே வைரலாக பரவி வருகிறது.

நிறைவேறிய ஆசை
அதில் நீண்ட நாள் ஆசை நிறைவேற்ற வந்த இடத்தில் அது என்னால் செய்ய முடியவில்லை அதனால் எனது மகளை அதை செய்ய வைத்து விட்டேன் என அவர் கூறி இருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வனிதா விற்கு பேராகிளைடிங் செய்வது தான் ரொம்பவும் பிடித்த தாம். அது ரொம்ப நாளா ஆசையும் கூட ஆனால் அதற்காக நான் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு மலையேறி வந்து இருக்கிறார்.

பயந்து வருதே
ஆனால் வந்த இடத்தில் பாராசூட்டில் பறப்பதற்கு இவருக்கு ரொம்ப பயமாக மாறிவிட்டதாம். அவர் பாராசூட்டில் பறப்பதற்காக ஹெலிகாப்டர் இருக்கும் என நினைத்து இருக்கிறார் .ஆனால் அங்கு இருந்தது வேறுவிதமாக இருந்ததால் இதில் நம்மால் கண்டிப்பாக முடியாது .அதனால் எனது மகள் ஜோவிகா போகிறார் என ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இருக்கிறார் .

மகளை ஏற்றி விட்டார்
அதில் வனிதாவின் மகள் ஜாலியாக பறந்து கொண்டிருக்கிறார் .அதனை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார் .இதனை பலபேர் பார்த்திருந்தாலும் பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . மகளை சந்தோஷமாக பார்த்து சந்தோஷிப்பதும் கூட தாய்மார்களின் சந்தோஷம்தானே.


Click it and Unblock the Notifications











