24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கும் வசந்த் டிவி!
வசந்த் தொலைக்காட்சி 24 மணிநேர செய்திச்சேனல் ஒன்றை தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல தொழில் அதிபரும் காங்கிரஸ் பிரமுகருமான வசந்தகுமார் நடத்தி வரும் சேனல் வசந்த் தொலைக்காட்சி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் தம் பிடித்து நின்று கொண்டிருக்கிறது.

ஆன்மீக நிகழ்ச்சிகள், சில தொடர்கள், பழைய பாடல்கள், தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இப்போது வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து 24 மணி நேர செய்தி சேனல் ஒன்று விரைவில் வர இருக்கிறது.
இதுபற்றி அதன் நிறுவனர் வசந்தகுமார் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் கட்சிக்கென தனி சேனல் கிடையாது. இந்தியாவிலேயே முதன் முறையாக நான்தான் எனது சொந்தப் பணத்தில் இந்த சேனலை ஆரம்பித்தேன்.
லாபகரமாக இல்லாவிட்டாலும், கட்சிக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் நடத்தி வருகிறேன். விரைவில் 24 மணி நேர செய்தி சேனல் ஒன்றையும் தொடங்க இருக்கிறேன்" என்கிறார் வசந்தகுமார்.


Click it and Unblock the Notifications











